எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"தமிழ்நாட்டில் மாநில பாடப்பிரிவு முறையில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது." - அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்
சென்னை : தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையின் போது மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளதாகவும் நேற்று சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
உறுப்பினர்கள் கேள்வி
சட்டமன்றப் பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து, நீட் தேர்வு முடிவு தற்போது வந்திருக்கிறது. ஆனால், அந்தத் தேர்வினுடைய முடிவை பார்த்தால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதை எப்படி மீட்பது என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. எனவே, நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழகத்தை மீட்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதிலளித்து பேசியதாவது:-
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி ஆகியோர் நீட் தேர்வையொட்டி அடுத்து அரசின் நிலைப்பாடு என்ன என்பதைக் கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு இதுகுறித்து கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டுவந்தபோது, அரசின்நிலைப்பாட்டினை நான் தெளிவாகச் சுட்டிக்காட்டினேன்.
அரசின் கவனம்
நீட் தேர்வு முடிவு வந்திருக்கிறது. நம்முடைய சட்டமன்றத்தில் ஏற்கெனவே 2 மசோதாக்கள், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, அவை மத்திய அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி நான் ஏற்கெனவே இந்த அவையில் தெரிவித்திருந்தேன். இன்றைய சூழ்நிலையில், இன்றைக்கு பிளஸ்-2 தேர்வுகள் எழுதிவிட்டு காத்துக் கொண்டிருக்கும் அத்துணை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உணர்வுகளை அரசு மிகுந்த கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதேபோல தலைமைச் செயலாளர், அட்வகேட் ஜெனரல் மற்றும் சட்ட நிபுணர்கள் அத்துணைபேரும் மிகுந்த கவனத்துடன் நம்முடைய இந்த மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு, உச்ச நீதிமன்ற பெஞ்சு தீர்ப்பு, மத்திய அரசின் சட்டம் இவற்றையெல்லாம் அரசு கவனத்தில்கொண்டு செயல்படுகிறது.
பிரதிநிதித்துவம் அளிக்க ...
நான் ஏற்கெனவே சொன்னதுபோல், 4.2 லட்சம் பேர் இந்த மாநில பாடப்பிரிவில் பயோலஜி தேர்வு எழுதியிருக்கிறார்கள். அதேபோல 4,675 மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வு எழுதியிருக்கிறார்கள். இந்த 4.2 லட்சம் பேர் இந்த மாநில பாடப்பிரிவில் பயோலஜி தேர்வு எழுதியவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் நம்முடைய அத்துணை பேரின் உணர்வு. அதற்காகத்தான் இந்த மாமன்றத்தில் இந்த 2 மசோதாக்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, அழுத்தம் எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அரசாணை வெளியீடு
இந்த மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனும் சொன்னார். மாநில பாடப்பிரிவில் பயோலஜி எழுதிய மாணவர்கள் நீட் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக வாங்கியிருக்கிறார்கள் என்ற கருத்தைச் சொன்னார். இந்தச் செய்தி பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்திருக்கின்றது. அப்படி குறைவாக மதிப்பெண்கள் வாங்கினாலும் கூட, அந்த மாணவர்களின் பிரதிநிதித்துவம் எந்தவிதத்திலும் பாதிக்ககூடாது என்பதை மிகுந்தகவனத்தோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, ஜூன் 22-ம் தேதி மாலை ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
85 சதவீதம் ஒதுக்கீடு
அந்த அரசாணையில் இந்த அரசின்நிலைப்பாட்டைச் சொல்லியிருக்கிறோம். மத்திய அரசில் 2 மசோதாக்கள் இன்னும் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், சட்டமன்றத்தில் நம்மால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒத்துக்கொள்ளப்பட்டால், பிளஸ்-2 தேர்வு எழுதி மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை நடைபெறும். ஒருவேளை இதில் காலதாமதம் ஏற்படுகிறபோது, இங்கு 4.2 லட்சம் மாணவர்கள் மாநில பாடப்பிரிவில் தேர்வு எழுதியிருக்கிறார்கள். 4,675 மாணவர்கள் மத்திய பாடப்பிரிவில் தேர்வு எழுதியிருக்கிறார்கள். இதில் விகிதாச்சாரப்படி எடுத்தக்கொண்டால் கூடகிட்டத்தட்ட 95 சதவிகிதம் நம்முடைய மாநில பாடப்பிரிவு மாணவர்களுக்கும், 5 சதவிகிதம்தான் சி.பி.எஸ்.இ மாணவர்களும் இருப்பார்கள். இவற்றையெல்லாம் மனதிலே வைத்துதான், சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இப்போது 15 சதவிகிதம் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் தேர்வு எழுதியவர்களுக்கும், நம்முடைய மாநில மாணவர்களின் உரிமையை நிலைநாட்டக்கூடியவகையில், அரசு மிகுந்த கவனத்தோடு 85 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தியை, நீங்கள் அத்துணைபேரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இந்தச் செய்தியை நான் இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உள்ஒதுக்கீடு அடிப்படையில் ...
ஆகவே, திட்டமிட்டபடி ஜூன் 26-ம் தேதி இதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்படும். ஜூன் 27-ம் தேதியிலிருந்து பிளஸ்-2 முடித்த அனைத்து மாணவர்களும் பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ளலாம். அகில இந்திய கலந்தாய்வு முடிந்த பிறகு, அடுத்தம் மாதம் 17- ம் தேதி திட்டமிட்டபடி நம்முடைய தமிழ்நாடு அரசினுடைய மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும். அந்தக் கலந்தாய்வு இந்த உள்ஒதுக்கீடு அடிப்படையில் இருக்கும். நிச்சயமாக இந்த உள்ஒதுக்கீட்டை அனைத்து உறுப்பினர்களும், அனைத்து கட்சியினரும் ஏற்பார்கள். நீங்களெல்லாம் தொடர்ந்து இந்தமாநிலத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தீர்கள். அதன் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து இந்த நல்ல முடிவை எடுத்திருக்கின்றார்.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.17 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்2 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 23 hours ago |
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
2ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்:13 மாநிலங்களில் அமைதியாக நடந்து முடிந்தது ஓட்டுப்பதிவு
26 Apr 2024புதுடெல்லி:13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் நேற்று காலை முதல் பாராளுமன்ற 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற நிலையில், பெரும்பாலும் எந்தவித அசம்பாவிதம் ஏதுமின்றி அமை
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.