எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எல்லா சீசன்களிலும் மக்களை தேடி வரும் பழங்களுள் ஒன்று ஆரஞ்சு. ஆரஞ்சுப்பழத்திற்கு மற்றொரு பெயர் கமலா பழம். இதன் நிறம் சிவப்பு, மஞ்சள் கலந்ததாக இருக்கும். ஆரஞ்சுப்பழத்தில் சிலவகை நல்ல இனிப்பாகவும், சிலவகை இனிப்பும் புளிப்பும் கலந்ததாகவும், சிலவகை வெறும் புளிப்பு சுவையுடன் இருக்கும். பல நோய்களை முன் கூட்டியே வராமல் தடுக்கும் மகத்துவமும், அனைத்து வயதினரும் தைரியமாகச் சாப்பிடக் கூடியதும், உடலில் ஏற்படும் உஷ்ணம், வயிற்று வலி அல்லது வயிறு சீராக்கும் ஆற்றல் உடைய பழம் ஆரஞ்சு.
ஆரஞ்சுப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இதில் வைட்டமின் ஏ, பி1, பி2, மற்றும் சி போன்ற உயிர்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. ஆரஞ்சுப்பழச்சாறு இரத்தத்தில் பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கும். உடல் பலகீனமாக உள்ளவர்கள் தொடர்ந்து ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும், உடல் பலம் பெறும். ஆரஞ்சுப்பழச்சாற்றில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, இளமைத் தோற்றத்தை உருவாக்கும். மலச்சிக்கலை நீக்கும், நன்கு ஜீரணமாகும், கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகும். இரவு படுக்கையில் படுத்தவுடன் தூக்கம் வராமல் தவிப்பவர்கள், ஆரஞ்சுப்பழச்சாற்றை அரை டம்ளர் அளவு எடுத்து, அத்துடன் தேக்கரண்டி அளவு தேன் கலந்து படுக்கைக்குச்செல்லும் அரை மணி நேரத்திற்கு முன் குடித்து வந்தால் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். ஆரஞ்சுப்பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து குடித்தால் ஜலதோஷம் குணமாகும்.
ஆரஞ்சுப்பழச்சாறு உடலை புத்துணர்வுடன் இருக்க வைக்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்படவும் உடலுக்கு முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்தைக் கொடுக்கும். பல் வலி, ஈறு வீக்கம், ஈறில் இரத்தம் வருதல் போன்ற கோளாறுகளை குணமாக்கும். ஆரஞ்சுப்பழம் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண், நெஞ்சுவலி, இதய நோய், எலும்பு மெலிவு முதலியவற்றை குணமாக்கும் வலிமை கொண்டது. ஆரஞ்சுப்பழத்தை முகத்தில் தேய்த்துவந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். பசும்பாலில் ஓரிரு சொட்டு ஆரஞ்சுப்பழச்சாறு கலந்து முகத்தில் தடவிவர முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும். ஆரஞ்சில் பல வைட்டமின்களோடு, சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து இருக்கிறது. பல நாட்களாக வியாதியில் பாதிக்கப்பட்டு தேறியவர்களுக்கு இது ஒரு சிறந்த இயற்கை டானிக். உடல் குளிர்ச்சி பெற, உடல் வலுப்பெற ஆரஞ்சு மரப்பூ சிறந்தது. ஆரஞ்சுப்பழச்சாறை கர்ப்பிணிகள் தினமும் ஒரு டம்ளரில் சிறிதறவு உப்பு சேர்த்து சாப்பிடலாம். ஆரஞ்சுப்பழத்தோலை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் வேகவைத்து அந்த நீரில் வாய் கொப்பளிக்க பற்களில் உள்ள கிருமிகள் அழியும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி, பல் ஈறுகளில் இரத்தம் போன்றவையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்சுப்பழச்சாற்றை ஒரு வாரம் கொப்பளித்து விழுங்கி வந்தால் நிவாரணம் கிடைக்கும். ஆரஞ்சுப்பழத்திலுள்ள வைட்டமின் சி உருவாக கொலாஜென்எ ( COLLAGEN ) ன்ற வளர்ச்சி உண்டாக்கக் கூடிய சத்து - எலும்புகள், இரத்தகுழாயின் உட்புறச் சுவர் மற்றும் தசைநார்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சுப்பழம் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளைக்குறைக்கவும், நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. ஆரஞ்சுப்பழம் குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எப்போதும் சுறுசுறுப்புடனும், நோய் தாக்குதலின்றி உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க உதவுகிறது. மாதவிலக்குக் காலங்களில் ஒருசிலருக்கு அதிக உதிரப் போக்கு ஏற்பட்டு உடல் சோர்ந்து, மன உளைச்சல் ஏற்பட்டால், இவர்கள் ஆரஞ்சுப்பழச்சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து குடித்துவந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவார்கள். ஆரஞ்சுப்பழத்தை தினமும் சாப்பிட்டால் உடல் வறட்சியை போக்கும், முகம் அழகு பெறும், தலைச்;சுற்றல் நீங்கும், வாய் துர்நாற்றம் போக்கும், தாகத்தைத் தணிக்கும் மருந்தாகும். ஆரஞ்சுப்பழத்தின் தோலை உலர்த்தி, அதில் சிறிது ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பொடி செய்து தினமும் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.
100 கிராம் எடை கொண்ட ஆரஞ்சுபழத்தில் உள்ள சத்துக்கள்
சக்தி – 53 கிராம் , வைட்டமின் ஏ – 99 மி.கிராம், வைட்டமின் பி – 40 மி.கிராம், வைட்டமின் பி2 – 18 மி.கிராம், வைட்டமின் சி – 80 மி.கிராம், நீர்ச்சத்து – 88 கிராம், பாஸ்பரஸ் - 18 மி.கிராம், கரோட்டின் - 1100 மி.கிராம், சுண்ணாம்புச்சத்து – 24 மி.கிராம், இரும்புச்சத்து – 0.2 மி.கிராம், புரதம் - 0.6 கிராம், கொழுப்பு – 0.2 கிராம், தாதுப்பொருள் - 0.3 கிராம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
இந்தோனேசிய வீராங்கனை சாதனை
26 Apr 2024மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்:பெங்களூருவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்
26 Apr 2024பெங்களூரு:கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
வாக்குப்பதிவு நாளில் சி.பி.ஐ. சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் கட்சி புகார்
27 Apr 2024கொல்கத்தா, தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.