எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்த அரசு விரைவில் சில நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு, சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்ந்து வருவதே காரணம் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும், விலை உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல் - டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள கலால் வரியை குறைக்க வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல் - டீசலை கொண்டு வர வேண்டும் என்றும் ஃபிக்கி, அசோசேம் போன்ற தொழில்துறை கூட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர், பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு இந்த வாரத்தில் சில நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வினால், நெருக்கடி போன்ற சூழ்நிலையை மத்திய அரசு எதிர்கொண்டுள்ளது. இதை சில நடவடிக்கைகள் மூலம் மத்திய அரசு கையாளத் திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்து, பெட்ரோலியத் துறை அமைச்சகத்துடன் மத்திய நிதியமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. கலால் வரியை குறைப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் மறுப்பதற்கில்லை. அதுதொடர்பான முடிவை எடுக்கும்போது, கலால் வரி குறைக்கப்பட்டால், நிகழ் நிதியாண்டில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பதையும் அரசு கவனத்தில் கொள்ளும்.
சில்லரைச் சந்தையில் பெட்ரோலியப் பொருள்கள் விலை 20-35 சதவீதம் வரை உயர்வதற்கு, மத்திய அரசு, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள்தான் காரணம். பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்வதால், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வருமானம் அதிகரிக்கும். எனவே, விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.67.97ஆக குறைந்துள்ளது. இது கடந்த 16 மாதங்களில் இல்லாத சரிவாகும். இதுவும் பெட்ரோலியப் பொருள்கள் விலை அதிகரித்திருப்பதற்கு காரணமாகும் என்று மத்திய அரசு அதிகாரி குறிப்பிட்டார்.
பெட்ரோல் மீது ரூ.19.48-ம், டீசல் மீது ரூ.15.33-ம் கலால் வரியாக மத்திய அரசு விதித்துள்ளது. இதேபோல், பல்வேறு மாநிலங்களும் வாட் வரியை விதித்துள்ளன. பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியில் ரூ.1 குறைக்கப்பட்டாலும், அதனால் ரூ.13,000 கோடி இழப்பு ஏற்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு செவ்வாய்க்கிழமை உயர்ந்திருந்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து ரூ.79.79ஆக விற்கப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.55ஆக இருந்தது. அதற்குப் பிறகு, சென்னையில் பெட்ரோல் விலை முதல்முறையாக தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. புதுடெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து, முறையே ரூ.76.87க்கும்,ரூ.84.70க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து, ரூ.79.53க்கு விற்கப்பட்டது. நாடு முழுவதும் டீசல் விலையும் அதிகரித்திருந்தது. புதுடெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.08ஆகவும், கொல்கத்தாவில் ரூ.70.63ஆகவும், மும்பையில் ரூ.72.48ஆகவும், சென்னையில் ரூ.71.87ஆகவும் இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
இந்தோனேசிய வீராங்கனை சாதனை
26 Apr 2024மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்:பெங்களூருவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்
26 Apr 2024பெங்களூரு:கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
வாக்குப்பதிவு நாளில் சி.பி.ஐ. சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் கட்சி புகார்
27 Apr 2024கொல்கத்தா, தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.