முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் மகள் கூட்டு பலாத்காரம்: வெட்கக் கேடு என ராகுல் ஆவேசம்

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, இந்தியாவின் மகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தால் வெட்கி தலைகுனிய வேண்டும் என்று ராகுல் காந்தி ஆவேசமாக கூறினார்.
ஹரியானா மாநிலம் ரேவரியில் சி.பி.எஸ்.இ தேர்வில் முதலிடம் பிடித்த 19 வயது மாணவி கடந்த 12ம் தேதி கடத்தப்பட்டு போதை மருந்து கொடுக்கப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

மாணவியை தீனதயாள் என்பவருக்கு சொந்தமான அறையை வாடகைக்கு எடுத்து அங்கு வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் மாணவியின் உடல்நிலை மோசமடைந்தது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் இன்னும் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை, இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறுகையில் இந்தியாவின் மற்றொரு மகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

கூட்டு பலாத்காரம் நடந்ததற்கு இந்தியா வெட்கக்கேடு தலை குனிய வேண்டும். ஹரியாணா பெண் பலாத்கார சம்பவத்தில் பிரதமர் மௌனம் சாதிப்பதை ஏற்க முடியாது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது வெட்கமாக இருக்கிறது. பலாத்காரம் செய்தவர்கள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர் என்று ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து