முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு மனித உரிமை விவகாரங்களில் உதவ தயார்

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு - இலங்கையில் நல்லாட்சி, மனித உரிமை விவகாரங்களில் புதிய அரசுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீராவை சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதையடுத்து, நிஷா தேசாய் பிஸ்வால் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நல்லுறவு, ஏற்படுத்தவே தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார். இலங்கையின் வளர்ச்சிக்கு உதவும் உற்ற துணையாக அமெரிக்கா திகழும் எனவும் நல்லாட்சி, மனித உரிமை விவகாரங்களில் உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர உடனிருந்தார். அவர் கூறுகையில், பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுடன் நெருங்கிச் செயல்பட இலங்கை விரும்புவதாகக் கூறினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஆட்சியின்போது, இலங்கை - அமெரிக்க உறவு மோசமடைந்தது.

மனித உரிமை மீறல் தொடர்பாக, 2012-ம் ஆண்டு முதல் இலங்கைக்கு எதிராக 3 தீர்மானங்களை அமெரிக்க கொண்டு வந்துள்ளது என்பது நினைவுக்கூரத் தக்கது. அதே வேலளையில், ஆட்சி மாறினாலும், ஐநா மனித உரிமைகள் ஆணைய விவகாரத்தில் இலங்கையின் கொள்கையில் மாற்றமில்லை என்று புதிய அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து