எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்தபோது தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களையும், படகுகளையும் சிங்கள கடற்படை பிடித்துச் சென்றது.மத்திய – மாநில அரசுகள் தூதரகம் மூலம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் தமிழக மீனவர்களின் 81 படகுகளை மட்டும் விடுவிக்க மறுத்து விட்டது.இந்த நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிறிசேனா புதிய அதிபராக பதவி ஏற்றதும் இந்தியாவுடன் சுமூக உறவு வைத்துக் கொள்வதற்காக 81 படகுகளையும் விடுவிக்க உத்தரவிட்டார். 81 படகுகளும் வடக்கு இலங்கையில் 4 இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.அந்தந்த பகுதி கோர்ட்டுகள் மூலம் படகுகளை விடுவிக்க முறைப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து படகுகளை கொண்டு வர தமிழக அரசு மீனவர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்தது.படகுகள் அனைத்தும் பராமரிக்கப்படாத நிலையில் மாதக் கணக்கில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் பழுதடைந்து உள்ளன. இதனால் 81 படகுகளையும் தமிழகத்துக்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே முதலில் படகுகள் எந்த நிலையில் உள்ளன என்பதை ஆய்வு செய்வதற்காக தமிழகத்தில் இருந்து மீன் வளத்துறை உதவி இயக்குனர் தலைமையில் ஆய்வாளர், மெக்கானிக்குகள், பணியாளர்கள் கொண்ட குழுவினர் இலங்கை சென்றனர். அவர்கள் 4 இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகளை பார்வையிட்டு அவற்றின் நிலை எப்படி உள்ளது? என்ன பழுது ஏற்பட்டுள்ளது என்பன குறித்து ஆய்வு செய்தனர்.
அவர்களில் ஒரு குழுவினர் தொடர்ந்து இலங்கையில் தங்கியுள்ளனர். மற்றொரு குழுவினர் சென்னை திரும்பி 81 படகுகளின் நிலை குறித்து ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.அதன் பேரில் படகுகளை பழுது பார்த்து மீட்டு கொண்டு வர 140 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதில் படகுகளின் உரிமையாளர்கள், படகுகளை ஓட்டிக் கொண்டு வரும் பணியாளர்கள், மின்சார கோளாறை சரி செய்யும் எலக்ட்ரீஷியன்கள், மர வேலை செய்யும் தச்சு பணியாளர்கள், மோட்டார் பழுது பார்க்கும் மெக்கானிக்குகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்திய கடலோர காவல் படை கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டு சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
அதன் பிறகு அவர்களை படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 4 இடங்களுக்கும் இலங்கை அதிகாரிகள் அழைத்துச் செல்கிறார்கள். படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கிய பின்பு அவற்றை தமிழகத்துக்கு கொண்டு வர ஏற்பாடு செய்வார்கள். சிறிய அளவிலான பழுது ஏற்பட்டுள்ள படகுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு கொண்டு வரப்படும்.
பெரிய அளவில் பழுது ஏற்பட்டுள்ள படகுகளுக்கு தேவைப்படும் உதிரிபாகங்களை தமிழக மீன் வளத்துறை அதிகாரிகள் கணக்கிட்டு தமிழகத்தில் இருந்து கொண்டு செல்கிறார்கள்.
அதன் பிறகு அடுத்த 10 நாட்களில் மீதம் உள்ள படகுகளையும் பழுது நீக்கி மீட்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக குழுவினர் 140 பேர் இலங்கை செல்வது குறித்து இந்திய கடலோர காவல் படை, இலங்கை கடற்படையிடம் தகவல் தெரிவித்து உரிய அனுமதி பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.2 கட்டங்களாக படகுகளை மீட்டு வருவதற்கான தீவிர ஏற்பாடுகளை தமிழக அரசும், மீன் வளத்துறையும் செய்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட