முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனுமதி வாங்கித்தான் பேட்டி எடுத்தோம்! தயாரிப்பாளர்

புதன்கிழமை, 4 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

புது டெல்லி - தூக்கு தண்டனை கைதி முகேஷ்சிங்கிடம் பேட்டி எடுத்த ஆவணப்பட பெண் தயாரிப்பாளர் வெஸ்லீ உத்வின் கூறுகையில், பெண்கள் மீதான ஆண்களின் மனோபாவத்தை வெளிப்படுத்தவே இந்த ஆவணப்படத்தை எடுத்தேன். இதற்காக 2013ம் ஆண்டு திகார் ஜெயில் டைரக்டர் ஜெனரலிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தேன். அவர் உள்துறை அமைச்சகத்திடம் கலந்து ஆலோசித்தார்.

2 வாரங்களில் எங்களுக்கு அனுமதி கிடைத்தது. உள்துறை அமைச்சகத்தின் அனுமதியும் கிடைத்துள்ளது. சிறை அதிகாரிகள் அனுமதி கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். இந்த ஆவணப்படம் எடுக்க 2 ஆண்டுகளாக திட்டமிட்டேன். இதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் படத்தை உடனே தூக்கி எறிந்து விடுகிறேன். ஆனால் இதில் எந்த பிரச்சினையும் இல்லை. பொதுமக்கள் நலன் கருதி பிரச்சாரம் செய்வதே இந்த படத்தின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து