முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்–ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

சென்னை: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்தக்கோரி நாடு முழுவதும் இன்று  (21–ந்தேதி) மற்றும் 22–ந்தேதி ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

இந்த வேலை நிறுத்தத்தை பி.எஸ்.என்.எல். ஊழியர்களும், அதிகாரிகளும் இணைந்து நடத்துகின்றனர். ஊழியர்கள், அதிகாரிகள் நலனுக்காக போராடாமல் பி.எஸ்.என்.எல். நிறுவன வளர்ச்சிக்காக இந்த ஸ்டிரைக் நடக்கிறது. இந்தியா முழுவதும் 2½ லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டில் 17 ஆயிரம் பேரும், இதில் சென்னை தொலைபேசியில் மட்டும் 8 ஆயிரம் பேரும் வேலை நிறுத்தத்தில் குதிக்கின்றனர்.2 நாட்கள் நடக்கும் வேலை நிறுத்தத்தில் இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர், டிவிசனல் பொறியாளர், கணக்கு அதிகாரிகள், ஜே.ஒ., ஜே.ஏ.ஒ., சி.ஏ.ஒ. மற்றும் அனைத்து ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள்.
பொதுமேலாளர் தவிர மற்ற அனைத்து அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபடுவதால் இரு நாட்களும் சென்னை உள்ளிட்ட எல்லா நகரங்களிலும் பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள், சேவை மையங்கள் இழுத்து மூடப்படுகின்றன.

போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் கே. கோவிந்தராஜ் கூறியதாவது:–

பி.எஸ்.என்.எல். 2000–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது, பணி பாதுகாப்பு அரசு பென்சன், பி.எஸ்.என்.எல். நிதி ஆதாரம் பாதுகாப்பு ஆகிய உறுதி மொழியை மத்திய அரசு கொடுத்தது. தற்போது இவை கைவிடப்படும் நிலை உள்ளது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த மத்திய அரசுகள் பி.எஸ்.என்.எல். பொதுத்துறைக்கு தேவையான கருவிகளை வழங்காமலும், நிதி உதவி அளிக்காமலும் நலிவடைய செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளன. லாப நோக்கத்தில் செயல்படும் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. அதனால் பி.எஸ்.என்.எல்.–ஐ காக்கவும், புத்தாக்கம் செய்யவும் வாடிக்கையாளர் நலன்களை பாதுகாக்கவும் இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து