எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஷில்லாங்,(மேகாலயா): இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று போற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் நேற்று உரையாற்றிய போது மேடையிலேயே மயங்கி விழுந்தார்.அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 84ஆகும்
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நேற்று ஷில்லாங்கில் உள்ள ஐஐஎம்கல்வி நிறுவனத்தில் உரையாற்றிகொண்டிருந்தார்.அப்போது அவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டது.அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள பெத்தானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆக்சிஜன் செலுத்தினர்.அவரது உடல் நிலை அபாய கட்டத்திலேயே இருந்தது என அந்த மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.இருப்பினும் சிகிச்சை பலன்இன்றி அவர் மரணமடைந்து விட்டதாக பின்னர் டாக்டர்கள் தெரிவித்தனர்.
முன்னதாகஇது குறித்து அந்த மருத்துவ மனையின் இயக்குனர் ஜான் ஷைலோ கூறுகையில் அப்துல் கலாமின் உடல் நிலை அபாய கட்டத்திலேயே இருந்தது.அவரது உடல் நிலை இயல்பு நிலைக்குவருவதற்காக சிகிச்சை அளித்து வந்தோம்.அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டுஇருந்தார். அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்தோம் .அவரது உடல் நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. என்றார்.அப்துல் கலாம் அனுமதிக்கப்பட்ட மருத்துவ மனைக்கு மேகாலயா கவர்னர் சண்முக நாதன் மற்றும் அந்த மாநில தலைமைச்செயலாளர் வர்ஜரி ஆகியோர் விரைந்து வந்து அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
கடந்த 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தார். அவரது சொந்த ஊர் ராமேஸ்வரம் ஆகும். அப்துல் கலாமின் மறைவு செய்தி கேட்டு ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழக மக்களும்மற்றும் இந்திய மக்களும்பெரும் துயரத்தில் ஆழ்ந்தார்கள். அப்துல் கலாம் மறைவுக்கு இந்திய தலைவர்களும் உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். அப்துல் கலாமின் உடல் இன்று டெல்லிக்கு கொண்டு வரப்படுகிறது.
அவரது மறைவையொட்டி 7நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.அப்துல் கலாம் அக்னி சிறகுகள் உள்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் மாணவர்களிடம் கலந்துரையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கனவு காணுங்கள் என்பது அப்துல் கலாமின் புகழ் பெற்ற வாசகம் ஆகும்.அப்துல் கலாம் கடந்த 1931ம்ஆண்டு அக் டோபர் மாதம் 15ம்தேதியன்று ராமேஸ்வரத்தில் பிறந்தார். இந்தியாவின் அணு ஆயுத ஏவுகணை நாயகன் என்ற சிறப்பை பெற்றவர்.அவரது தலைமையில் அக்னி மற்றும் பிருதிவி ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய ஆட்சியின் போது அப்துல் கலாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.
அவர் கடந்த 92ம்ஆண்டு முதல் 99ம் ஆண்டு வரை பாதுகாப்புத்துறை அமைச்சரின் முதன்மைஅறிவியல் ஆலோசகராக பணியாற்றினார்.பல்வேறு பதவிகளை வகித்தவர் அப்துல் கலாம். இந்தியாவில் எத்தனையோ ஜனாதிபதிகள் பதவி வகித்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் என்றால் அவர் அப்துல் கலாமாகதான் இருக்க முடியும்.அப்துல் கலாம்மறைவுக்கு பிரதமர் மோடி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இரங்கல் தெரிவித்தார்.அப்துல் கலாம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்து அறிக் கை வெளியிட்டார்.இதேபோல தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
வாக்குப்பதிவு நாளில் சி.பி.ஐ. சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் கட்சி புகார்
27 Apr 2024கொல்கத்தா, தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.