முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி

சனிக்கிழமை, 6 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

லாஸ் ஏஞ்சல்ஸ்  -அமெரிக்காவில் விமானங்கள் வானில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலியாயினர். அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் அருகே, இரண்டு சிறிய ரக விமானங்கள் வானில் பறந்த போது, எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில், இரு விமானங்களும், லாஸ் ஏஞ்சல்ஸ் கடலில் துறைமுகம் அருகே விழுந்து மூழ்கி உள்ளது. இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

விபத்துக்குள்ளான விமானங்கள் பீச்கிராப்ட் 35 பொனான்சா மற்றும், சிட்டாப்ரியா என்று தெரியவந்துள்ளது. இதில் சிட்டாப்ரியா, சாகச விமானமாகும். டொர்ரான்ஸ் ஏர்போர்ட்டை சேர்ந்தது இந்த விமானம். இவ்விபத்தில் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்ததாக தெரிகிறது. கடலுக்குள் சடலங்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்