எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக இந்த ஆண்டு நடக்க இருந்த பொது நுழைவு தேர்வை ஒரு ஆண்டு தள்ளி வைப்பதற்கான அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார். இதனால், இந்த ஆண்டு தமிழகத்தில் நுழைவு தேர்வு கிடையாது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பிநட்டா அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட மாட்டாது . திட்டமிட்டபடியே நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டநிலையில் ஜனாதிபதி அவசரச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய கல்வி வாரியம் நுழைவு தேர்வு நடத்தி வருகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் அல்லாது மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளிலும் 15 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மாநில அரசு மருத்துவ கல்லூரிகளில் எஞ்சிய 85 சதவீத இடங்கள் அந்தந்த மாநிலங்களில் நடத்தப்படும் நுழைவு தேர்வு மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த நுழைவு தேர்வு சில ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டு விட்டது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் பொது நுழைவு த்தேர்வு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதற்கு தமிழகம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. நுழைவு தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. இவ்வழக்கில் “விருப்பப்படும் மாநில அரசின் மருத்துவ கல்லூரிகளுக்கு நுழைவு தேர்விலிருந்து விலக்கு அளிக்கலாம். அவர்கள் தனியாக நுழைவு தேர்வு நடத்த அனுமதிக்கலாம்” என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தது. இதனை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை.
இந்த ஆண்டே பொது நுழைவு தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதை தொடர்ந்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஜே.பி.நட்டா சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். நுழைவு தேர்வு முடிவை தள்ளி வைக்க வேண்டும் என பல மாநில அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்படும் என நட்டா உறுதி அளித்தார். இதற்கிடையில் பொது நுழைவு தேர்வை ஒரு ஆண்டு தள்ளி வைக்க அவசர சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.
இது குறித்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த வாரம் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் மருத்துவ பொது நுழைவு தேர்வை ஒரு ஆண்டு தள்ளி வைக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அவசர சட்டம் ராஷ்டிரபதி பவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரான அவசர சட்டம் என்பதால் உடனடியாக அதில் கையெழுத்திட பிரணாப் மறுத்துவிட்டார். இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மத்திய சுகாதாரதுறை அமைச்சர் நட்டா பிரணாப்பை சந்தித்து விளக்கம் அளித்தார். அவசர சட்டத்துக்கான காரணங்களை அவர் விளக்கினார். இதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கு மட்டும் மருத்துவ பொது நுழைவு தேர்வை ரத்து செய்யும் அவசர சட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டார். இந்த அவசர சட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதிக்காத பட்சத்தில் தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் கவுன்சலிங் அடிப்படையில் மட்டும் நடத்தப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.