முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவாதி வீடு அருகிலேயே கொலையாளி இருக்கிறான் : செல்போன் சிக்னல் காட்டிக் கொடுத்தது

வியாழக்கிழமை, 30 ஜூன் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - சுவாதியின் வீட்டு அருகிலேயே கொலை யாளி இருந்திருப்பது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி பெண் பொறியாளர் சுவாதி(24) வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.  சுவாதியை கொலை செய்த கொலைகாரன் அவரது செல்போனையும் எடுத்துச் சென்றுவிட்டார். காலை 6.40 மணிக்கு சுவாதி கொலை செய்யப்பட்டார்.

அவரது செல்போனை எடுத்துச் சென்ற கொலைகாரன் காலை 8.15 மணி வரை அதை ‘ஆன்' செய்தே வைத்திருந்திருக்கிறார். பின்னர் அதை ‘சுவிட்ச் ஆப்' செய்திருக்கிறார். சுவிட்ச் ஆப் செய்யப்பட்டபோது அவரது செல்போன் சிக்னல் சூளைமேடு பகுதியை காட்டியுள்ளது. கொலை செய்யப்பட்ட சுவாதியின் வீடும் சூளைமேட்டில்தான் உள்ளது. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட இடமும் அவரது வீட்டு அருகில் உள்ள இடத்தையே காட்டுகிறது.

எனவே சுவாதியை கொலை செய்து விட்டு, அந்த நபர் சூளைமேட்டுக்கு சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சுவாதியை கொலை செய்தவர் சூளைமேட்டில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சூளை மேட்டில் உள்ள வீடுகள், தங்கும் விடுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் கடந்த 4 நாட்களாக போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். சூளைமேட்டில் வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வரு கிறது. கொலையாளி என்று சந்தேகப் படும் நபரின் புகைப்படத்தையும் பொதுமக்களிடம் காட்டி விசாரணை நடத்துகின்றனர்.

முதியவர் பலி
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அப்போது நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஆதிகேசவன்(70) என்ற முதியவர் ரயில் நிலையத்துக்கு வந்தபோது சுவாதி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து மயங்கி விழுந்திருக்கிறார். அருகே இருந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர் பின்னர் இறந்துவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்