முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி, குஜராத் மக்கள் பா.ஜ.க.மீது கடும் கோபம் - கெஜ்ரிவால் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : டெல்லியும், குஜராத்தும் பாரதிய ஜனதாவிற்கு எதிராக போராடும். இந்த மாநில மக்கள் பா.ஜ.க மீது கடும் கோபத்தில் உள்ளனர்  என டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் ஆச்சரியத்தை அளிப்பதாக இருக்கும் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் குஜராத்திற்கு சென்று இருந்தார். அப்போது அந்த மாநில மக்கள்  ஆனந்திபென்  தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு எதிராக கடும் கோபத்தை வெளிப்படுத்தினர். பதிதார் மற்றும் தலித் சமூகத்தினர் மீது ஆனந்தி பென் அரசு தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தியது என்றும் குமுறினார்கள் என கெஜ்ரிவால் தெரிவித்தார்.

குஜராத் முதல்வர் ஆனந்தி பென் மீது அந்த மாநில மக்கள் கொண்டுள்ள கோபம் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். குஜராத்தில் தலித் சமூகத்தினர் மீது நடந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார் என்றும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்