முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு பாலியல் தொல்லை: நாமல் ராஜ பக்சே மீது குவியும் புகார்கள்

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

கொழும்பு  - வேலை வாங்கி தருவதாகக்கூறி பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நாமல் ராஜ பக்சே மீது நூற்றுக்கணக்காந பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந் துள்ளன. அவரது தம்பிகள், மனைவி மற்றும் மகன்கள் மீது அத்தகைய புகார்கள் கூறப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராஜ பக்சே மூத்த மகன் நாமல் மீது அதிரடியாக ‘செக்ஸ்’ புகார் கூறப்பட்டுள்ளது. தற்போது நாமல் இலங்கை பாராளுமன்றத்தில் எம்.பி. ஆக உள்ளார்.

வேலை வாங்கி தருவதாக கூறி பல பெண்களை கற்பழித்ததாக அவர் மீது புகார்கள் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் மீது 3 பெண்கள் ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ளனர். கண்டியில் உள்ள பிரபல ஓட்டல்களுக்கு இளம் பெண் களை அழைத்து சென்று அவர்களுடன் நாமல் ‘செக்ஸ்’ உல்லாசம் அனுபவித்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகிறது.

அதை தொடர்ந்து அந்த ஓட்டல்களுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாதம் ஒன்றுக்கு 4 நாட்கள் ஓட்டல்களுக்கு சென்று பல பெண்களுடன் நாமல் உல்லாசம் அனுபவித்தது தெரியவந்துள்ளது.  இந்த விவகாரத்தில் கண்டி நீலப்படை அணியின் அதிகாரியும் சம்பந்தப் பட்டிருப்பதும் கண்டறியப் பட்டுள்ளது.

நாமல் ராஜபக்சேவுக்கு எதிராக இதுவரை 109 பாலியல் புகார்கள் தெரி விக்கப்பட்டுள்ளதாக பத்திரி கைகளில் செய்தி வெளியாகி உள்ளது.இது குறித்து நாமல் ராஜபக்‌ஷே கூறும் போது எனது குடும்பத்துக்கு எதிரான குற்றசாட்டுகள் அரசில்  தூண்டுதலால் கூறப்படுகிறது.என கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்