எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கார்த்திகைப் பட்ட நிலக்கடலை சாகுபடி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நவீன தொழில் நுட்ப முறைகளை பற்றி நம்பியூர், வேளாண் உதவி இயக்குநர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் எண்ணெய் வித்து பயிர்களில் ஒரு முக்கியமான பயிராக நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கடலை எண்ணெய் உற்பத்தியில் 94 சதவீதம் உணவிற்காகவும், 4 சதவீதம் தொழில்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
இந்தியா முதலிடம்: இதில் 54 சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது. நிலக்கடலை உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. நிலக்கடலைப் பருப்பில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளது. மேலும், இது ஒரு சிறந்த தீவனப் பயிராகப் பயன்படுகிறது. நிலக்கடலை பருப்பிலிருந்து எண்ணெய் எடுத்தபின் எஞ்சிய புண்ணாக்கில் 51.75 சதவீதம் புரோட்டினும், 0.22 சதவீதம் கொழுப்பும், 26.94 சதவீதம் கார்போஹைட்ரேட்டும் 5.7 சதவீதம் தாதும் உள்ளது. எனவே கால்நடைகளுக்கு ஊட்ட உணவாக இதைப் பயன்படுத்தலாம். இதில் 7 சதவீதம் தழைச்சத்தும் உள்ளதால் ஊட்டமிகு இயற்கை எருவாகவும் பயன்படுகிறது.
இரண்டு மடங்கு மகசூல்: இப்படிப்பட்ட பெருமைகள் அடங்கிய நிலக்கடலை சராசரியாக இறவையில் ஏக்கருக்கு 2 டன்களும் மானாவாரியில் ஒரு டன்னும் மகசூல் கொடுத்து வருகிறது சில முதன்மையான நவீன தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த மகசூலை இரண்டு மடங்காக்க இயலும்.
பருவம் மற்றும் மண் வகை: இறவை நிலக்கடலையைப் பொருத்தவரை ஏப்ரல், மே (சித்திரைப்பட்டம்) ஜூன், ஜூலை (ஆடிப்பட்டம்) டிசம்பர், ஜனவரி (கார்த்திகைப் பட்டம்) ஆகிய மாதங்களில் நிலக்கடலை சாகுபடி செய்ய ஏற்றது. பொதுவாக கார்த்திகைப் பட்டம் என்பது கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் (நவம்பர், டிசம்பர்) விதைப்பு செய்யப்படுகிறது. கார்த்திகை மாதத்திற்குள் விதைப்புச் செய்வது அதிக மகசூலுக்கு வாய்ப்பை அதிகரிக்கிறது.
மண்: மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் நிலக்கடலைக்கு ஏற்றதாகும்.
உழவு: சட்டிக் கலப்பை பயன்படுத்தி உழுதபின் 3 அல்லது 4 முறை இரும்புக் கலப்பை அல்லது நாட்டுக் கலப்பைக் கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை (புழுதி ஆகும் வரை) உழ வேண்டும்.
ரகங்கள்: டி.எம்.வி-7, டி.எம்.வி-13, கோ- 3, கோ-4, வி.ஆர்.ஐ-2, வி.ஆர்.ஐ-3, வி.ஆர்.ஐ -5 , வி.ஆர்.ஐ -6 , ஏ.எல்.ஆர்-3 ஆகியவை ஏற்ற இரகங்களாகும்.
விதை நேர்த்தி: விதைகளை திரம் அல்லது மாங்கோசெப் மருந்து - 4 கிராம் - கிலோ விதைக்கு அல்லது கார்பென்டசிம்-2 கிராம்ஃகிலோ என்ற அளவில் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்யவும். இதை விதைப்புக்கு ஒரு நாள்முன்பு, செய்ய வேண்டும். இரசாயன மருந்துக்குப் பதிலாக ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைகோடெர்மா அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் என்ற நன்மை செய்யும் உயிரியல் மருந்துகளைக் கலந்தும் விதைக்கலாம். மேலும், டிரைகோடெர்மா விரிடி… உயிரியல் பூஞ்சாணத்தை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் விதைப்பின் போது சிறிது தொழு உரத்துடன் கலந்து இடலாம். இதன் மூலம் தண்டு அழுகல், கழுத்தழுகல்,வேரழுகல் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. நிலக்கடலைப் பயிரில் போதுமான பயிர் எண்ணிக்கை இல்லாதது மகசூல் குறைவுக்கு முக்கியமான காரணமாதலால், விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியமாகும்.
ரைசோபியம் விதை நேர்த்தி: ரைசோபியம் உயிர் உரம்-400 கிராம் (2-பாக்கெட்) என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு உண்டான விதையுடன் அரிசிக் கஞ்சி சேர்த்துக் கலந்து நிழலில் காயவைத்து விதைக்க வேண்டும். மேலும், விதைப்பின் போது ரைசோபியம் 4 பாக்கெட், பாஸ்போ பேக்டர் - 4, பாக்கெட் சிறிது தொழு உரத்துடன் கலந்து வயலில் இட வேண்டும்.
இடைவெளி: 30 ஒ 10 செ.மீ இடைவெளியிலும், 4 செ.மீ ஆழத்திலும் விதைக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்க வேண்டும். அதாவது ஒரு சைக்கிள் டயர் அளவுக்குள் 11 செடிகள் இருக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து மேலாண்மை: இறவைப் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 7:14:21 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து தரக்கூடிய 15 கிலோ யூரியா, 88 கிலோ சூப்பர் பாஸ்பேட் 35 கிலோ பொட்டாஷ் உரங்களை முழுவதும் அடியுரமாகவே இடவேண்டும். அல்லது டி.ஏ.பி 40 கிலோவுடன் பொட்டாஷ் 35 கிலோ – சேர்த்து அடியுரமாக இடலாம். நிலக்கடலைக்கு அனைத்து உரங்களையும் விதைப்பின் போது அடியுரமாகவே இடவேண்டும் என்பது முக்கியமானதாகும்.
நுண்ணூட்டமிடுதல் : நிலக்கடலை நுண்ணூட்டம் 5 கிலோ-வை 40 கிலோ மணலுடன் கலந்து, விதை விதைத்தவுடன் மேலாகத் தூவ வேண்டும். பயிர் வெளுப்பு, மற்றும் மஞ்சள் நிறமாகி வளர்ச்சி குன்றுவதை இதன் மூலம் தவிர்க்கலாம்.
களைக்கொல்லி: விதை விதைத்து 3 - வது நாளில், வயலில் போதுமான ஈரப்பதம் இருக்கும் போது ஏக்கருக்கு 800 மில்லி ’புளுகுளோரலின்” – என்ற களைக்கொல்லியை 300 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். அவ்வாறு தெளிக்காத பட்சத்தில் விதைத்த 20 - 25 ம் நாளில் களை முளைத்தபின் தெளிப்பதற்கு ‘இமாசிதாபைர்” என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 300 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம்.
ஊட்டச் சத்து குறைபாடு: துத்தநாக குறைபாடுள்ள நிலத்திற்கு ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் இடலாம். மேலும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள நுண்ணுட்டக் கலவைகளையும் பயன்படுத்தலாம்.
ஜிப்சம் இடுதல்: நிலக்கடலை உற்பத்தியை அதிகரிக்க பயிருக்கு ஜிப்சம் இடுதல் மிகவும் அவசியம். இதில் 23 சதம் - சுண்ணாம்பு சத்தும், 18 சதம் - கந்தக சத்தும் அடங்கியுள்ளது. இதில் சுண்ணாம்பு சத்தானது காய்கள் திரட்சியாகவும், அதிக எடையுடன் காய் உருவாகவும் வழி செய்கிறது.
கந்தகச் சத்தானது நிலக்கடலையில் எண்ணெய்ச்சத்தை அதிகரிக்கிறது. ஒரு ஏக்கருக்கு 80-கிலோ ஜிப்சத்தை அடியுரமாக விதைக்கும்போது இடவேண்டும், பின்னர் 40-45-ம் நாளில் களை வெட்டும் போது மீண்டும் ஒரு முறை 80-கிலோ ஜிப்சத்தை இட்டு பிறகு மண் அணைக்க வேண்டும்.
பூக்கள் உதிர்வதைத் தடுக்கவும், அதிக காய்கள் பிடிக்கவும் ஏதுவாக’பிளேனோபிக்ஸ்” - என்னும் பயிர் ஊக்கியை ஏக்கருக்கு 140 மில்லி என்ற அளவில் விதைத்த 25 - ம் நாளிலும் 35 - ம் நாளிலும் இரண்டு முறை தெளிக்கலாம்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு: சுருள் பூச்சி மற்றும் சிகப்பு கம்பளிப்புழுவை கட்டுபடுத்த துவரை, தட்டை (அ) உளுந்து பயிர்களை ஊடுபயிர் செய்வதால் அவற்றில் இடப்படும் முட்டைகளை எளிதில் சேகரித்து அழித்து விடலாம்.
பொருளாதாரச் சேதநிலையை அறிந்து வேளாண்மைத்துறை பரிந்துரைக்கும் மருந்துகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். இப்படிப் பல்வேறு நவீன உத்திகளைக் கையாண்டு நிலக்கடலை சாகுபடியில் இரட்டிப்பு மகசூல் பெறலாம்.
இவ்வாறு நம்பியூர், வேளாண்மை உதவி இயக்குநர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் போலி வீடியோக்களை உருவாக்கி தவறான தகவலை பரப்புகின்றனர் : கர்நாடகாவில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
29 Apr 2024பெங்களூரு : தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி செயற்கை நுண்ணறிவு மூலம் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்றும் மத அடிப்பட
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.