முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாட்கோ மூலம் மகளிர்களுக்கு வேளாண் நிலம் வாங்கும் திட்டம்:கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை

ஆதிதிராவிட மக்களின் நில உடைமையை அதிகரிக்கும் பொருட்டும், ஆதிதிராவிட மகளிரின் நிலையை உயர்த்தும் பொருட்டும் தாட்கோ மூலம் மகளிர்களுக்கு வேளாண் நிலம் வாங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என தி.மலை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தின்கீழ் திட்டத்தொகையில் 30 சதவிகிதம் மான்யமாக அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 18 வயதுக்கு மேல் 65 வயதுகுட்பட்ட பெண்கள் ஆதிதிராவிடர் அல்லாத பிற வகுப்பினர்களிடமிருந்து நிலம் வாங்கி பயன்பெறலாம். நன்செய் நிலமாக இருப்பின் 2.5 ஏக்கர் மற்றும் புன்செய் நிலமாக இருப்பின் 5 ஏக்கர் வரை வாங்கலாம். ஏற்கனவே நிலம் உடையவராக இருப்பின், வாங்க உத்தேசித்துள்ள நிலத்தோடு சேர்த்து நன்செய் நிலமாக இருப்பின் 2.5 ஏக்கரும், புன்செய் நிலமாக இருப்பின் 5 ஏக்கருக்குள் வாங்கலாம். வாங்க உள்ள வேளாண் நிலத்தினை விண்ணப்பதாரரே தேர்வு செய்து நில விற்பனையாளரிடம் எழுத்துமூலமாக ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். நில மேம்பாடு திட்டத்தின்கீழ் ஏற்கனவே உள்ள நிலத்தில் நீர்வள ஆதாரத்தை பெருக்கும்பொருட்டு நபார்டு வழிகாட்டுதலின்படி, நிலத்தடி நீர் ஆதாரம் உள்ள பகுதிகளில் திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறு, பம்புசெட் அமைத்தல், சொட்டுநீர்பாசனம் மற்றம் சுழல்முறை நீர்பாசனம் அமைத்தல் போன்றவற்றிக்கு திட்டத்தொகையில் 30 சதவிகிதம் மான்யமாக அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்திகீழ் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் பயன்பெறலாம். வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் தங்களது சாதி சான்று, வருமான சான்று, குடும்ப அட்டை, வாங்க உத்தேசித்துள்ள நிலத்தின் சிட்டா, பட்டா, அடங்கல், நிலவரைபடம், சார் பதிவாளரிடம் பெற்ற நிலத்திற்கான வழிகாட்டு மதிப்பு, கிரைய ஒப்பந்த பத்திரம், வில்லங்க சான்று ஆகியவைகளோடு ஷ்ஷ்ஷ்.லீttஜீ:ணீஜீஜீறீவீநீணீtவீஷீஸீ.tணீலீபீநீஷீ.நீஷீனீ என்ற தாட்கோ இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ, எண்.183 முத்துவிநாயகர் கோவில் தெரு, திருவண்ணாமலை என்ற முகவரியுள்ள அலுவலகத்தில் தொடர்புகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்