முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துர்கா தேவி தொழில்நுட்ப கல்லூரி 16ஆம் ஆண்டு பட்டமுறிச் சான்று விழா

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      சென்னை

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஸ்ரீ துர்கா தேவி தொழில்நுட்ப கல்லூரியின் 16ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது.

 

விழாவிற்கு ஆர்.எம்.கே கல்வி குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை தாங்கனார். ஸ்ரீ துர்கா தேவி தொழில்நுட்ப கல்லூரி துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர், அறங்காவலர் செளமியா கிஷோர், செயலாளர் எலமஞ்சி பிரதீப், துணை தலைவர் துர்காதேவி பிரதீப் முன்னிலை வகித்தனர்.

 

விழாவில் பேசிய ஆர்.எம்.கே கல்வி குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் பேசுகையில் கற்ற கல்வியை கொண்டு வீட்டிற்கும் நாட்டிற்கும் செய்ய வேண்டிய கடமையில் முழுமூச்சாக ஈடுபாடு செலுத்துவதே பட்டமுறிச் சான்று பெற்ற மாணவர்களின் கடமை என்றதோடு, மாணவர்கள் தாங்கள் பெற்ற அறிவை சுய தொழிலில் செலுத்தி புதிய படைப்புகளுக்கு வழிசெய்ய வேண்டும் என்றார்,

 

தொடர்ந்து விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.எஸ்.பழனிச்சாமி, ஆர்.எம்.கே.கல்வி குழும ஆலோசகர் வி.மனோகரன் விழாவில் சிறப்புரை ஆற்றினார்கள்.

 

தொடர்ந்து விழாவில் 298 தொழில்நுட்ப மாணவர்களுக்கு பட்டமுறி சான்றிதழ்கள் ஆர்.எம்.கே கல்வி குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினத்தால் வழங்கப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்