எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா குன்னம் வட்டம், எழுமூர்(மே) கிராமத்தில் நேற்று (15.03.2017) மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு தலைமையில் நடைபெற்றது.
மக்களை தேடி நிர்வாகம்
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள், மக்களைச் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் மக்களைத் தேடி அரசு நிர்வாகம் என்ற இதுபோன்ற முகாம்களை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடத்தி, உரிய பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் முழுவதும் எழுமூர்(மே) உள்ளிட்ட கிராமங்களில் அரசு அலுவலர்கள் முகாமிட்டு, அரசு அலுவலர்கள் அனைவரும் தங்களது துறை சார்ந்த மக்கள் நலத் திட்டங்களுக்குரிய பயனாளிகள் இனம் கண்டறிந்து, அதன் மூலம் நேற்று (15.03.2017) பல்வேறு துறைகளின் சார்பில் 127 பயனாளிகளுக்கு 50,28,625- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
இப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்க ஏற்பாடு செய்யவேண்டும். இதன்மூலமாக குழந்தைகளின் எதிர்காலம் வளமுள்ளதாக மாறும். மேலும் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் 18004254556 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். இங்கு அனைத்து துறை அலுவலர்களாலும் தெரிவிக்கப்பட்ட அவர்களது துறை சார்ந்த மக்கள் நலத் திட்டங்களை மக்கள் அனைவரும் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள வறட்சி நிவாரண நிதி சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வரவுவைக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் வங்கிக்கணக்கை சரிபார்த்துக்கொள்ளவேண்டும். பணம் கிடைக்கப்பெறாத விவசாயிகள் தங்கள் கிராம நிர்வாக அலுவலரை அணுகி தங்களது வங்கிக்கணக்கை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.13,60,000- மதிப்பிலான உதவிகளும், தோட்டக்கலைத்துறை மூலம் தேசிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.85,200- மதிப்பிலான கல்தூண் பந்தல் சாகுபடி, இனகவர்ச்சி பொறி, ஒளிபொறி, மஞ்சள் பொறி போன்ற உபகரண உதவிகளும், புதுவாழ்வுத்திட்டம் மூலம் அமுதசுரபி கடன் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.2,00,000ஃ- கடன் உதவிகளும், வருவாய்த்துறை மூலம் 71 பயனாளிகளுக்கு ரூ.17,35,500- மதிப்பிலான சாலை விபத்து நிவாரணம், நத்தம் இலவச வீட்டு மனை பட்டா, திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத்துறை மூலம் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்டவைகள் மூலம் 28 பயனாளிகளுக்கு ரூ.15,73,300ஃ- மதிப்பிலான கீழ்பாசன குழாய், விசைதுளைப்பான், சுழற்கலப்பை, சூரியஒளி பொறி போன்ற நலத்திட்ட உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ.41,850- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 1 பயனாளிக்கு ரூ.32,375- மதிப்பிலான நலத்திட்ட உதவியும் என 127 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.50,28,285ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இச்சிறப்பு மனுநீதிநாள் நிறைவு விழாவில் மொத்தம் 63 மனுக்கள் பெறப்பட்டு, 42 மனுக்கள் ஏற்கப்பட்டு, 21 மனுக்கள் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர்(ச.பா.தி) புஷ்பவதி, மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகன், வருவாய் வட்டாட்சியர் தமிழரசன், வட்டாட்சியர்(ச.பா.தி) மனோண்மணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.