முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீஞ்சூர் அடுத்த வல்லூர் தனியார் கம்பெனியில் வடமாநில தொழிலாளி விபத்தில் பலி

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      சென்னை

மீஞ்சூர் அடுத்த வல்லூர் கரையான்மேடு பகுதியில் இந்தியா சிமெண்ட் கம்பெனி உள்ளது.இங்கு இரண்டாயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.வடமாநிலத்தைச் சேர்ந்த நாற்பது காவலாளிகள் இங்கு காவல் பணி செய்து வருகின்றனர்.

இயந்திர வாகனம்

நேற்று முன் தின இரவு அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பரத்ஜோதி [வயது-40] என்பவர் இரவுப்பணியில் ஈடுப்பட்டிருந்த போது போர்லிப்ட் இயந்திர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.கம்பெனி மேலாளர் சங்கரன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்