எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை.-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 அக்ரினி குடியிருப்பில் உள்ள வசுதாரா குடியிருப்பு வளாகத்தில் அடுக்குமாடி வீடு உரிமையாளர்கள் நலசங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பச்சை மற்றும் நீல நிற குப்பைத் தொட்டிகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது.
மதுரை மாநகரை தூய்மையான மாசில்லாத மதுரையாக மாற்றுவதற்காக மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். மாநகரில் உள்ள கால்வாய்கள், நீர்நிலைகள் என எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி தண்ணீர் செல்லமுடியாமல் கொசுக்கள் உற்பத்தியாக ஏதுவாக உள்ளது. மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 600 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதனை தரம் பிரிப்பதற்கு நிறைய பொருட்செலவு ஏற்படும். எனவே ஒவ்வொரு வீட்டிலும் சேரும் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதால் குப்பையிலிருந்து உரம், இயற்கை எரி வாயு உள்ளிட்ட பயனுள்ள பொருட்கள் தயாரிக்க எளிதாக இருக்கும். குப்பைகளையும் பயனுள்ள வகையில பயன்படுத்த முடியும். மேலும் பருவமழை பொய்த்த காரணத்தினால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மாநகராட்சியின் சார்பில் சுமார் ரூ.10 கோடி செலவு செய்யப் பட்டுள்ளது. எனவே நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமையான மரங்களை வளர்க்க முன்வர வேண்டும். மேலும் தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாடித் தோட்டத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய இடம் இருந்தாலே இதற்கு போதுமானது. மாவட்ட தோட்டக்கலை துறையின் மூலம் மாடித் தோட்டத்திற்கு தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி தங்களுக்கு தேவையான காய்கறிகளை நீங்களே உற்பத்தி செய்து சுத்தமான காய்கறிகளை பெறலாம். மாநகராட்சி என்பது பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்ததுதான். எனவே சுத்தமான மாநகராக மாற்றுவதற்கு அனைவரும் முன் உதாரணமாக குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பைகள் என பிரித்து வழங்க வேண்டும் என்றார்.
ஆணையாளர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது :
நம் வீடுகளில் சேரும் குப்பைகளை இதுநாள்வரை ஒரே குப்பைத் தொட்டியில் போட்டு வந்துள்ளோம்;. இந்த நிலைமையை மாற்றி மட்கும் குப்பைகளை பச்சை நிறத் குப்பைத் தொட்டிகளிலும், மட்காத குப்பைகளை நீல நிற குப்பைத் தொட்டிகளிலும் போட வேண்டும். மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை எவைஎவை என அறிந்து கொள்வதற்காக மாநகராட்சியின் சார்பில் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அதனை புரிந்து குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும். குப்பைகளை பிரித்து வழங்குவதால் கழிவுகள் கழிவுப் பொருட்களாக இல்லாமல் பயனுள்ள பொருட்களாக பயன்படுத்த முடியும். குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதால் மறு சுழற்சி செய்ய எளிதாக இருக்கும். மேலும் மட்கும் குப்பையிலிருந்து உரமும் மட்காத குப்பையிலிருந்து பயோ ஆயில் தயாரிக்கப்படும். எனவே மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி இத்திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற உதவ வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் திரு.சதிஷ் ராகவன், உதவி ஆணையாளர் திரு.செல்லப்பா, உதவி நகர்நல அலுவலர் திரு.பார்த்திப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சித்திரவேல், சுகாதார அலுவலர் திரு.ராஜ்கண்ணன், செயற்பொறியாளர் திரு.சேகர், வசுதாரா அடுக்குமாடி வீடு உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் திரு.எல்.சுரேஷ், இணை செயலாளர் திரு.மோகன், பொருளாளர் திரு.நாகராஜன், என்லைட் டிரஸ்ட் நிறுவனர் செல்வி.ப்ரியதர்சினி உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் குடியிருப்;போர் சங்கத்தின் சார்பில் அனைத்து வீடுகளுக்கும் பச்சை மற்றும் நீல நிற குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டது. முன்னதாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
வாக்குப்பதிவு நாளில் சி.பி.ஐ. சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் கட்சி புகார்
27 Apr 2024கொல்கத்தா, தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.