முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி பகுதிகளில் வாரத்தின் புதன்கிழமை மட்டும் பிளாஸ்டிக் உள்ளிட்ட மட்காத குப்பைகளை வழங்க வேண்டும் ஆணையாளர் அனீஷ் சேகர் தகவல்

புதன்கிழமை, 19 ஜூலை 2017      மதுரை
Image Unavailable

மதுரை.- மதுரை மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட மட்காத குப்பைகள் தரம் பிரித்து வழங்கும் பணியினை ஆணையாளர்  அனீஷ் சேகர்,  பார்வையிட்டார்.
 மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 வார்டு எண்.42 சொக்கிக் குளம் பகுதி, இந்திரா நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக மட்காத குப்பைகள் வாங்கும் பணியினை பார்வையிட்டார். அங்குள்ள குடியிருப்போர் சங்கத்தினரிடம் வாரத்தில் புதன்கிழமை மட்டும் மட்காத குப்பைகளை வழங்க அப்பகுதிவாழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தெரிவித்தார். அப்பகுதியில் செல்லும் பீ.பீ.குளம் பிரதான வாய்க்காலில் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கியுள்ளதை பார்வையிட்டு உடனடியாக சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். இனிவரும் காலங்களில் வாய்க்காலில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது உடனடி அபராதம் விதிக்குமாறு கூறினார். அப்பகுதியில் உள்ள தெருக்களில் பொதுமக்கள் குடிநீர் பிடிப்பதை பார்வையிட்டு குடிநீர் வருவது குறித்து கேட்டறிந்தார். சொக்கிகுளம் பகுதியில் கால்வாயில் குப்பைகள் கொட்டிய தனியார் நிறுவனத்தினருக்கு உடனடியாக ரூ.5000 அபராதம் விதித்தார். அதனைத் தொடர்ந்து புதூர், ஏ.ஆர்.லைன், தந்தை பெரியார் நகர், லூhர்து நகர் ஆகிய பகுதிகளிலும் மட்காத குப்பைகள் பிரித்து வாங்கும் பணியினை பார்வையிட்டார்;. ஏ.ஆர்.லைன் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை (சு.ழு.PடுயுNவு) பார்வையிட்டு அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளிடம் பொது அறிவு தொடர்பான கேள்விகளை கேட்டு உரையாடினார். மேலும் வார்டு எண்.28 மங்களகுடியில் ரூ.13.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பணியினையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் கட்டும் பணியினையும் ஆய்வு செய்தார்.
 இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் திரு.பழனிச்சாமி, உதவி நகர்நல அலுவலர் திரு.பார்த்திப்பன், செயற்பொறியாளர் திரு.ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சித்திரவேல், சுகாதார அலுவலர் திரு.சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் திரு.அலாவுதீன், திரு.செல்வகுமார், திரு.இளையராஜா உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து