எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் தெரிவித்து வழக்கை வருகிற 23-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல் எம்.எல்.ஏ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் நேற்று பகலில் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்தனர்.
அனைவருக்கும் அழைப்பு
அ.தி.மு.க பொதுக்குழு செப். 12-ம் தேதி நடைபெறும் என்று கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பொதுக்குழுவை கூட்டுவதற்கான ஏற்பாடுகள் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரூ வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைப்பெற்று வந்தன. பொதுக்குழு உறுப்பினர்களும் சென்னைக்கு பயணமானார்கள்.
ஐகோர்ட்டில் வழக்கு
இதனிடையே, அ தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடை விதிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் சில நாட்களுக்கு முன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், கடந்த 28.8.2017 அன்று பொதுக்குழு தொடர்பாக அனுப்பிய கடிதத்தில் அ தி.மு.க (அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா) என்று அணிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த அந்த கடிதத்தில், பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது யார் என்று குறிப்பிடாமல் நிர்வாகி என்று தெரிவித்துள்ளனர். அதேபோல தற்போது பொதுச்செயலாளர் இல்லாத பட்சத்தில் துணை பொதுச்செயலாளர் தான் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். மேலும் தேர்தல் ஆணையத்தில் அ தி.மு.க யாருக்கு சொந்தம் என்ற விவகாரம் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பொதுக்குழு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. யாருக்கு என்ற விவகாரம் நிலுவையில் உள்ளபோது பொதுக்குழு கூட்டுவது சட்ட விரோதம். எனவே பொதுகுழுவுக்கு தடைவிதிக்க வேண்டும் என வெற்றிவேல் எம்.எல்.ஏ அதில் கோரியிருந்தார். அவர் மனு மீதான விசாரணை 11ம் தேதி நடைபெறும் என்று ஐகோர்ட் அறிவித்தது.
ஒருவர் மட்டும் வந்தது ஏன்?
அதன்படி நேற்று இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஏன் ஒரே ஒருவர் மட்டும் தடைகேட்டு வந்துள்ளார் என கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அக்கட்சியின் உறுப்பினர் என்ற முறையில் தடைகேட்டு அவர் வந்துள்ளார் எனக் கூறினார். அப்போது நீதிபதி, உங்கள் அணியும் பொதுக்குழுவில் கலந்து கொள்ளலாமே எனக்கேட்டார். அதற்கு மனுதாரர் தரப்பில் இந்த கூட்டம் விதிகளுக்கு எதிரானது என தெரிவித்தனர். அதற்கு நீதிபதி, அப்படி அனுப்பப்பட்ட கடிதம் விதிகளுக்கு எதிரானது என்றால், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகலாமே? என மீண்டும் கேட்டார்.
மேலும், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், நீங்கள் அதை நிராகரித்துவிட்டு வீட்டில் இருக்கலாமே என்றும் கருத்து தெரிவித்தார். இதுபோல சட்டமன்ற உறுப்பினர் வழக்கு தொடர வேண்டும் என்றால், அது முதலில் தலைமை நீதிபதி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது, ஆனால் அதை இந்த வழக்கில் கடைபிடிக்காமல், பொதுக்குழுவுக்கு தடை கோரி தனிப்பட்ட முறையிலேயே வெற்றிவேல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கண்டனத்துக்குரியது
அதேபோல் டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக செயல்படக்கூடிய மனுதாரர், தினகரனையே 4-வது எதிர்மனுதாரராக சேர்த்துள்ளார். தனக்கு ஆதரவாக உள்ளவர்களை இதுபோல் எதிர்மனுதாரராக சேர்த்து விடுவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்று செய்வது வழக்கு, விசாரணையின் முக்கிய கட்டத்தை எட்டும்போது அதை திசை திருப்பும் நோக்கமாகும். இந்த செயல் கண்டனத்துக்குரியது, இதுபோன்று உள்நோக்கம் கொண்ட செயல்களை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் நீதிபதி கூறினார்.
ரூ.1 லட்சம் அபராதம்
பின்னர் நீதிபதி, வெற்றிவேலுக்கு மூன்று வாய்ப்புக்களை வழங்கினார். வெற்றிவேல் விருப்பப்பட்டால் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் அவருக்கு விருப்பம் இருந்தால் மதியம் சென்று உணவருந்திவிட்டு வரலாம் அதேபோல கூட்டத்துக்கு செல்ல விருப்பமில்லாவிட்டால் அவர் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, வீட்டிலேயே இருக்கலாம் என தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி கார்த்திகேயன், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக வழக்கை தொடுத்த வெற்றிவேலுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததோடு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் இந்திய தேர்தல் ஆணையத்தை அணுக சட்டப்படியான சுதந்திரம் உள்ளது எனவும் உத்தரவில் தெரிவித்தார்.
மேல்முறையீட்டு மனு
இந்நிலையில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வெற்றிவேல் எம்.எல்.ஏ நேற்றைய தினமே மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்கக் கோரியும், தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரியும் தலைமை நீதிபதி அமர்வில் வெற்றிவேல் எம்.எல்.ஏ மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜீவ் சக்தர், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.
தடையில்லை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த தடைவிதிக்க மறுத்துவிட்டனர். பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தனர். மேலும் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என்றும் தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
பொதுக்குழு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதால் அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர். சிலர் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளில் அ.தி.மு.க.வினர் மும்முரமாக ஈடுபட தொடங்கிவிட்டனர். இதையொட்டி சென்னை வானகரம் பகுதி கலைகட்டியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
வாக்குப்பதிவு நாளில் சி.பி.ஐ. சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் கட்சி புகார்
27 Apr 2024கொல்கத்தா, தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.