எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில், மாவட்டத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுப்புழு ஒழிப்பதற்கான களப்பணியில் ஈடுபடும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியைச் சார்ந்த மாணவிகளுக்கு வழங்கப்பட்ட களப்பணி குறித்த சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள், சுற்றுப்புற தூய்மைப்படுத்தும் பணிகள், காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து முறையான மருத்துவ சிகிச்சை வழங்கி பாதுகாத்தல், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துதல் என்கின்ற அடிப்படையில் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பரமக்குடி அரசு மருத்துமனை ஆகியவற்றில் பொதுமக்கள் நலனுக்காக 24 மணி நேரமும் செயல்படும் வைரஸ் காய்ச்சல் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டு மருத்துவர்கள் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக மருத்துவபணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளில் ராமநாதபுரம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியைச் சார்ந்த மாணவிகளை பகுதி வாரியாக குழுக்களாக ஒருங்கிணைத்து களப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதன்மூலம் சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு கூடுதல் பயிற்சியாகவும், பொதுமக்களுக்கு ஏடிஸ் கொசுப்புழு குறித்த கூடுதல் விழிப்புணர்வும் ஏற்படும். அதனடிப்படையில் கொசுப்புழு ஒழிப்பு களப்பணியில் ஈடுபடும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியைச் சார்ந்த மாணவிகளுக்கு இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இன்றைய தினம் பொது சுகாதாரத்துறையின் சார்பாக சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் மாணவிகளுக்கு ஏடிஸ் கொசுப்புழுவினால் ஏற்படும் பாதிப்புகள், கொசுப்புழு உற்பத்தியினை கண்டறிவதற்கான நடைமுறைகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியினை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பார்வையிட்டு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பயன்பாட்டில் இருந்த இரத்த அணு கணக்கீட்டு கருவியுடன் தற்போது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய இரத்த அணு கணக்கீட்டு கருவியினைப் பார்வையிட்டார். கூடுதலாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள இக்கருவியின் மூலம் பொதுமக்கள் சிரமமின்றி இரத்த சிவப்பணுக்ககள், வெள்ளையணுக்கள், இரத்த தட்டுகள் மற்றும் ஹீமோகுளோபின் அளவு உள்ளிட்ட விவரங்களை கால விரயமின்றி பெற்று பயனடையலாம். இதுதவிர மேலும் கூடுதலாக இரண்டு இரத்த அணு கணக்கீட்டு கருவி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இரத்த அணு கணக்கீட்டு கருவிகள் செயல்பாட்டில் உள்ளன. தேவைப்படும் நபர்கள் தங்களது அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று இக்கருவியினை முழுமையாகப் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த நிகழ்வின் போது வருவாய் கோட்டாட்சியர் பேபி, இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.சகாய ஸ்டீபன்ராஜ் , துணை இயக்குநர் (காசநோய்) மரு.முனியரசு, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜவஹர்லால், மண்டல மருத்துவ அலுவலர் மரு.விநாயகமூர்த்தி, அரசு செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் சாமுண்டீஸ்வரி உள்பட அரசு அலுவலர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
...............
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.