எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹன்டே முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் உள்ளிட்ட பிரமுகர்கள் வாழ்த்தினர்.பிறந்த நாளை முனனிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு ரூ.4.79 லட்சம் மதிப்புள்ள நல உதவிகளை ஜி.வி.செல்வம் வழங்கினார்.
நல உதவிகள்
விஐடி பல்கலைக்கழகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் ஆர்.என்.பங்சன் பேலஸ் அரங்கில் நடைபெற்றது. வேலூர் பாரதியார் விவேகானந்தர் வஊசி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுபாட்டாளர் முனைவர் பி.செந்தில் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் பங்கேற்று வாழ்த்து தெரிவித்து பேசுகையில் பிறந்த நாள் கானும் ஜி.வி.செல்வம் வேலூர் மாவட்டத்திற்கு நீர் ஆதாரமாக உள்ள பாலாறு புதர்கள் வளர்ந்து மாசுபட்டு கிடந்ததை கவனத்தில் கொண்டு பசுமை பாலாறு என்ற திட்டத்தின் மூலமாக பாலாற்றை சுத்தம் செய்தார்.அண்மையில் பெய்த மழையால் பாலாற்றில் வெள்ளம் ஓடுகிறது. அதோடு வேலூர் பசுமையுடன் விளங்க வேண்டும் என்பதற்காக பசுமை வேலூர் என்ற திட்டத்தின் மூலமாக பல ஆயிரம் மரங்களை நட்டு பசுமையாக்கியள்ளார் என பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹன்டே ஜி.வி.செல்வத்தை வாழ்த்தி பேசுகையில் குழந்தைகளின் நலனில் அக்கரை கொண்டுள்ள இவர் குழந்தை தொழிலாளர் பள்ளிகளுக்கு எண்ணற்ற உதவிகளை செய்து வருவது பாராட்டுக்குறியது என்றார்.
இதில் விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் பங்கேற்று வாழ்த்தி பேசியதாவது:
இந்திய நாடு உலகில் அதிக இளைஞர் பலம் கொண்ட நாடாக விளங்கி வருகிறது அவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதின் மூலம் இந்திய நாடு வளர்ந்த நாடாக மாறும்.நம்மிடையே பலமும் உள்ளது பலவீனமும் உள்ளது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை ஆறிந்து பலவீனத்தை விலக்குவதற்கான முயற்சி எடுத்தால் எதிலும் வெற்றி முடியும்.நமக்கு குடும்ப பொறுப்பு சமூக பொறுப்பு நாட்டு பொறுப்பு உள்ளது குடும்பம் மற்றும் சமூக பொறுப்பில் அக்கரை காட்டுவதின் மூலம் நாடு உயரும்.சமூகத்தில் நல்ல மணிதராக விளங்க வேண்டும் நல்ல மனிதருக்குரிய தகுதிகள் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் மூலமாக திருவள்ளுவர் வலியுறுத்தியுள்ளார். நம்மிடையே உழைப்பு குறைந்து வருகிறது சோம்பேறித்தனம் உள்ள நாடு முன்னேறமுடியாது. குறைந்த வேலை அதிக வருவாய் என்று நினைத்தால் அது குற்ற செயல்களில் தான் முடியும்.இளைஞர்களுக்கு நல்ல கருத்துக்கள் கற்று தர வேண்டும் அதோடு ஒழுக்கம் கட்டுபாடு நேரம் தவறாமை அவசியம் என்றார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை மூலமாக அதன் கவுரவ தலைவரும் விஐடி துணைத்தலைவருமான ஜி.வி.செல்வம் குழந்தை தொழிலாளர் நல பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளுக்கு ரூ.4.79 லட்சம் மதிப்புள்ள ஆடைகள், விளையாட்டு சாதனங்கள், நோட்டு புத்தகங்கள், குடிநீர் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை வழங்கி பாராட்டுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது:
மனிதன் வாழ்வதற்கு உண்ண உணவு உடுத்த உடை இருக்க இடம் அவசியம் அதனை கருத்தில் கொண்டுதான் குழந்தைகளுக்கு இந்த நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மணப்பான்மை வேண்டும்.நாம் வளர்ந்து விட்டால் போதாது சமுதாயமும் வளர வேண்டும் அதற்காக நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.நமது நாடு இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடு அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்குவதின் மூலம் நமது நாடு வளர்ந்த நாடாக மாறிவிடும் என்றார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளையை சேர்ந்த வே.சிவா ப.சேகர் ரொட்டேரியன் சீனிவாசன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர் முடிவில் நாஷ்வா அமைப்பின் தலைவர் வி.கே.எஸ்.எம்.கனேஷ் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n