முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான தஷ்வந்துக்கு அடி உதை: பெண்கள் ஆவேசம்

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, சிறுமி ஹாசினி மற்றும் தனது தாயையும் கொலை செய்த தஷ்வந்தை போலீசார் நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்திய போது அவரை பெண்கள் சிலர் ஆவேசமாக தாக்கினர்.

சிறுமி ஹாசினையை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற தஷ்வந்த் அண்மையில் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில், தனது தாயையும் கொலை செய்து மும்பை தப்பிச்சென்று கைதானார். இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஹாசினி கொலை வழக்குக்காக செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து வரப்பட்டப்பார்.  தஷ்வந்த் நீதிமன்றம் கொண்டுவரப்படும் செய்தி கேட்டு நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள், மாதர் சங்கத்தினர், வழக்கறிஞர்கள் திரண்டிருந்தனர். இதனால் வழக்கு நேரம் வரும் வரை காவல் வாகனத்தில் பாதுகாப்பாக அவரை அமர்த்தி வைத்திருந்தனர். பின்னர் வழக்குக்காக அவரை பாதுகாப்புடன் போலீஸார் அழைத்துச் சென்றனர்.

அப்போது அவரை சூழ்ந்து நின்ற பெண்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரை போலீசார் சுற்றி சூழ்ந்து காக்க முயன்றனர். ஆனால் போலீசாரையும் மீறி நான்கு பக்கமும் பொது மக்களும் வழக்கறிஞர்களும் தாக்குதல் நடத்தினர். ஒருவழியாக போலீசார்  பாதுகாப்பாக நீதிமன்றம் உள்ளே அழைத்துச் சென்றனர். இளைஞர் தஷ்வந்த் தொடர்ந்து கொடூரமாக குற்றச்செயலில் ஈடுபட்டதால் அவருக்கு ஆஜராகவிருந்த வழக்கறிஞரும் விலகியதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து