முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவும், வடகொரியாவும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்: ரஷ்ய அமைச்சர் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

மாஸ்கோ :  கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்காவும், வடகொரியாவும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரவ் கூறியிருப்பதாவது:

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத போர் அபாயம் நிலவுகிறது. இந்த பதற்றத்தை தணிக்க வடகொரியா மட்டுமன்றி அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வடகொரியாவும் அமெரிக்காவும் நேரடியாக அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்துவதை ரஷ்யா வன்மையாகக் கண்டிக்கிறது. அதேநேரம் வடகொரியா மீது சர்வ தேச அளவில் அதிக அழுத்தம் அளிப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதே யோசனையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கு சீனா முழு ஆதரவு அளித்தது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகள் ரஷ்யாவின் யோசனைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து