எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் சூளுரை ஏற்போம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளனர்.
தமிழகம் முழுவதும்...
அ தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளையொட்டி தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது:–
எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் விழாவினை உலகெங்கும் கொண்டாடி மகிழும், அ தி.மு.க. உடன்பிறப்புகள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளும், வணக்கங்களும் உரித்தாகுக. தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில், அவர் தோற்றுவித்த மக்கள் பேரியக்கமான அண்ணா தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் இருந்திட வேண்டும்; அதற்கேற்ப நம்முடைய அரசியல் பயணமும், பணிகளும் அமைந்திட வேண்டும்’’ என்று அம்மா சூளுரைத்தவாறு, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, அவருக்கு செலுத்தும் நன்றிக் காணிக்கையாக தமிழகம் முழுவதும் கொண்டாடி பெருமிதம் அடைகிறோம். எம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம் பெற்ற தமிழக மக்களின் நலம் பேணி, எண்ணில்லா அரும் பணிகளை நடைமுறைப்படுத்தும் நல்லாட்சியை தமிழகத்தில் நிலைபெறச் செய்த மகிழ்ச்சியோடு, புரட்சித் தலைவரின் பிறந்த நாளை நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.
ஜெயலலிதா தியாகத்தால்...
அம்மா தன்னுடைய உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் ஓய்வின்றி ஒவ்வொரு நாளும் உழைத்ததன் விளைவாகவும், குறிப்பாக, 2016-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தன்னுடைய உடல் நலனைவிட அண்ணா தி.மு.க.வின் வெற்றியே இன்றியமையாதது என்று பாடுபட்டதாலும் கிடைத்த அமோக வெற்றியால் தமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி அமைந்தது. அம்மாவின் தியாகத்தால் மலர்ந்த இந்த நல்லாட்சியை, அம்மாவின் மறைவிற்குப் பிறகு அபகரிக்க சிலரும், கவிழ்த்திட சிலரும் செய்த சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் முறியடித்து, கழகத்தின் நலனே தொண்டர்களின் நலன், கழகத்தின் வெற்றியே தொண்டர்களின் வெற்றி; நம்மைவிட கழகமே பெரியது, கழகத்திற்காக வாழ்வதே நமக்குள்ள பெரும் சிறப்பு’’ என்று புரட்சித் தலைவி அம்மா மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியதை மனதில் ஏற்று, கழக ஆட்சியை நிலைபெறச் செய்திருக்கிறோம்.
நன்றிக்கடன்....
அம்மா, தனக்குப் பின்னும் பல ஆண்டுகள் அதி.மு.க.வின் ஆட்சி தொடரும் என்று சட்டமன்றத்தில் சூளுரைத்தார். எம்.ஜி.ஆரின் பேரியக்கத்தை ஒற்றுமை உணர்வோடு கட்டிக் காத்து, வெற்றிப் பாதையில் வழிநடத்திச் செல்வது தான், ஓர் ஆசானாக, அன்புத் தாயாக, அளவில்லாக் கருணை கொண்ட தெய்வமாக, நம்மையெல்லாம் வழிநடத்தி வந்த அம்மாவுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை கழக உடன்பிறப்புகள் அனைவரும் நினைவில் கொண்டு பணியாற்றுவோம். எம்.ஜி.ஆரின் 10 ஆண்டு கால கழக அரசு, தமிழக மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் ஆற்றிய பணிகளை நினைவில் கொண்டு, அந்த மாபெரும் தலைவர் வகுத்தளித்த பாதையிலேயே, அம்மா உருவாக்கிய அம்மாவின் அரசும் தொடர்ந்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
சாதனைகள்...
எடுத்துக்காட்டாக, தமிழ் மொழிக்கென தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அம்மா அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியத்தைஇரு மடங்காக உயர்த்தி, 2,000 ரூபாய் வழங்க ஆணையிட்டார். மேலும், உலகப் பொது மறையாம் திருக்குறளை சீனம், கொரியா மற்றும் அரபு மொழியிலும், பாரதியார் மற்றும் பாரதிதாசன் பாடல்களை சீனம் மற்றும் அரபு மொழியிலும், மொழி பெயர்த்து வெளியிடச் செய்து, தமிழ் மொழியின் புகழை பரப்பினார். எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா உருவாக்கித் தந்த பாதையில் நடைபோட்டு, அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்து தமிழ் மொழி குறித்த ஆய்வினை பலரும் மேற்கொள்ள ஏதுவாக, 10 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கியதில் நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம்.
தொடர்ந்து நடை...
இதைப் போல, எம்.ஜி.ஆரும், அம்மாவும் விரும்பியவாறு தமிழக மக்களுக்கு இன்னும் பல பணிகளை ஆற்ற, கழக அரசு தொடர்ந்து பாடுபடும் என்ற உறுதியினை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். எம்.ஜி.ஆர். தோல்வி அறியாத சாதனையாளர். தன்னுடைய அரசியல் வாழ்வை மட்டுமல்லாமல், கலையுலக வாழ்வையும் கொள்கை சார்ந்த வாழ்வாக வாழ்ந்தவர். தனக்குப் பின் கழகத்தை வழிநடத்த, தலைமைப் பொறுப்புக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் அம்மாவுக்கு அளித்த சிறப்புக்கு உரியவர். வேறு எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத பெருமையாக ‘‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’’ என்று வாழ்ந்த இரு பெரும் தலைவர்களால் பேணி வளர்க்கப்பட்ட இயக்கம் நம்முடைய அண்ணா தி.மு.க. என்னும் பேரியக்கம். இந்த இயக்கம், புரட்சித் தலைவரிடம் அரசியல் பாடம் பயின்ற அம்மாவின் தலைமையில் எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி கழகத் தொண்டர்களின் நலன்களையும், அவர்களது உணர்வுகளையும் மட்டுமே முன்னிறுத்தி நடைபோட்டதைப் போல, மக்கள் பணி, கழகத்தின் உயர்வு, கழகத் தொண்டர்களின் உணர்வு இவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து நடைபோடும்.
வெற்றிக்கு சூளுரை
எம்.ஜி.ஆரின் தலைமையிலும், அம்மாவின் தலைமையிலும், எப்பொழுதும் கட்டுப்பாட்டோடும், கடமை உணர்வோடும் பணியாற்றி வந்த நாம், அதே உணர்வோடும், கட்டுப்பாட்டோடும் கழகப் பணிகளை ஆற்றுவோம்.எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் கழகம் மகத்தான வெற்றி பெறும் வகையில் நாம் அனைவரும் பணியாற்றுவோம் என்று புரட்சித் தலைவரின் பிறந்த நாள் விழா நேரத்தில் சூளுரை ஏற்போம். இவ்வாறு அ தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
வாக்குப்பதிவு நாளில் சி.பி.ஐ. சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் கட்சி புகார்
27 Apr 2024கொல்கத்தா, தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.