முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் கமிஷன் பரிந்துரை

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம், குடியரசு முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, கடந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதி 21 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவை செயலாளர்களாக நியமித்தது. "எம்.எல்.ஏ.க்கள் ஆதாயம் தரும் 2 பதவிகளை வகிப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல். எனவே, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியிகள் ஜனாதிபதியிடம் புகார் தெரிவித்தன. இந்த புகார் கடிதம், ஜனாதிபதி மாளிகையில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. இதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.

இதனிடையே .எம் எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தடுக்க, டெல்லி அரசு முன் தேதியிட்டு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. ஆனால் இதற்கு அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அனுமதி அளிக்க மறுத்து விட்டார். 21 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் தனது பதவியை ராஜினமா செய்த விட்டதால், 20 எம்.எல்.ஏ.க்கள் மீதான விசாரணை மட்டுமே தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரையும் தகுதி நீக்கம் செய்யலாம் என ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை,  ஜனாதிபதிக்கு அனுப்பப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுப்பார் என தெரிகிறது.

எனினும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்யும் பரிந்துரை அனுப்பட்டிருப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இந்த விவகாரம் விசாரணையில் இருப்பதால் கருத்து கூற விரும்பவில்லை என தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து