முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கென்யாவில் காய்கறி சந்தையில் தீ விபத்து: 15 பேர் உடல் கருகி பலி

வியாழக்கிழமை, 28 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

நைரோபி : கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள காய்கறி சந்தை ஒன்றில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில் 15 பேர் உடல் கருகி பரிதாபமாகப் பலியாகினர்.

கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் பெரிய காய்கறி சந்தை ஒன்று உள்ளது. அந்த சந்தையில் திடீர் என தீ பற்றியது. சந்தை உட்பகுதியில் பற்றிய தீ, படிப்படியாக அக்கம்பக்கம் இருந்த கட்டிடங்களுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கிய 15 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் சிக்கிய கட்டிடங்கள் சிதைவுற்று பலவீனமாக இருப்பதால், தீயில் பலியானோரின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள தீயனைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து