முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்புக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்திய வம்சாவளி பெண் எம்.பி கைது

வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக டிரம்ப் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்டித்து பெண்களுடன் சென்று அந்நாட்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய வம்சாளி பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால் கைது செய்யப்பட்டார்.

இந்திய வம்சாளி பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
\பின்னர். பிரமிளா ஜெயபால் கூறுகையில்,
தஞ்சமாக அமெரிக்காவுக்கு வரும் அகதிகளை கொடுமை படுத்துவதையும், அவர்கள் குழந்தைகளை தனியாக பிரித்து வேறு இடத்தில் அடைப்பதையும் ஏற்க முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகள் அமெரிக்கா முழுவதும் உள்ள பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தான் அரசுக்கு எதிராக பேராட்டம் நடத்தினோம். இருப்பினும் எங்கள் போராட்டம் தொடரும் எனக் கூறினார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் பிரமீளா ஜெயபால் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து