முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய உணவகத்தில் நிறவெறிக் கருத்து: பிரிட்டன் பெண் காவலர் பதவி நீக்கம்

திங்கட்கிழமை, 2 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

லண்டன் : இந்திய உணவக ஊழியருக்கு எதிராக நிறவெறிக் கருத்துகளைக் கூறிய பிரிட்டன் பெண் காவலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டனின் நியூகேஸ்டில் நகரில் அமைந்துள்ள "ஸ்பைஸ் ஆஃப் பஞ்சாப்' உணவகம், இந்திய உணவு வகைகளை வழங்கி வருகிறது.

அந்த உணவகத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி வந்த கேட்டி பாரட் (22) என்ற காவல்துறை பெண் அதிகாரி, உணவகத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரைப் பற்றி தனது நண்பரிடம் நிறவெறிக் கருத்துகளைக் கூறியதாக குற்றம் சாட்டப்படுகிறது. மதுபோதையில் அவர் கூறிய கருத்துகள் குறித்து உயரதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுகுறித்து துறை ரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், கேட்டி பாரட் இந்திய உணவகத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக முடிவு செய்த ஒழுங்காற்று ஆணையம், அவரை பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து