முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கோஷமிட சட்டத்தில் இடமில்லை:முரளிதர் ராவ்

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்ப்பு கோஷமிட சட்டத்தில் இடமில்லை என்று பா.ஜ.க.வின் தேசியப் பொதுச் செயலாளரும், கட்சியின் தமிழக பொறுப்பாளருமான எம்.முரளிதர் ராவ் கூறியுள்ளார். தூத்துக்குடி செல்லும் விமானத் தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்து பா.ஜ.க.வுக்கு எதிராக மாணவி சோபியா கோஷமிட்ட சம்பவம் குறித்து பேட்டியளித்த

முரளிதர் ராவ் கூறியதாவது, இந்த விஷயத்துக்கு தமிழக ஊடகங்கள்  முக்கியத்துவம் அளித்து பெரி தாக்குகின்றன. அந்தப் பெண் என்ன சுதந்திரப் போராட்ட வீரரா? நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அவருக்கு பொருந்தாதா? பேச்சு சுதந்திரம் எனும் பெயரில் கோயில், கழிவறை, விமானப் பயணம் எனச் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு தலைவரை பார்த்து எதிர்ப்பு கோஷமிட முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. நம் நாட்டில் இப்போது சுதந்திரப் போராட்டம் நடைபெறவில்லை. இவ்வாறு முரளிதர் ராவ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து