எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, நேற்று புதுடெல்லியில் மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து 20 வேகன்களில் நிலக்கரி அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்ற மத்திய அமைச்சர் கோயல், 16 வேகன்களில் நிலக்கரி அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக தங்கமணி தெரிவித்தார்.
புது டெல்லியில் ரயில் மற்றும் நிலக்கரிதுறை அமைச்சர் பியூஷ் கோயலை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் பிறகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன்விபரம் வருமாறு:-
தமிழகத்தில் எதிர்கட்சிகள் எல்லாம் அரசியல் செய்வதற்காக மக்கள் மத்தியில் ஒரு பீதியை கிளப்பி கொண்டியிருக்கின்றார்கள். தமிழகத்தில் எப்பொழுதுமே மின்வெட்டு வராது. மின்வெட்டு வராது மட்டுமல்லாமல் மின் மிகை மாநிலமாகவே இருந்து வருகிறது. இந்த அளவுகோளை மத்தியரசினுடைய சமன்பாட்டு அறிக்கையிலேயே அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். நான் கடந்தமுறை பேட்டி அளிக்கின்ற பொழுது, மே மாதம் கடைசி வரையிலிருந்து செப்டம்பர் மாத கடைசி வரையில் அல்லது அக்டோபர் முதல் வாரம் முதல் காற்றாலை மின்சாரம் இருக்கும். அந்த காற்றாலை மின்சாரம் இருக்கின்ற பொழுது அனல் மின் நிலையங்கள் எல்லாம் பாரமரிப்பு பணிக்காக (மத்திய தொகுப்பிலிருந்து வருகின்ற அனல் மின் நிலையம் மற்றும் மாநிலத்தின் அனல் மின்நிலையம்) 2 மாத காலங்களுக்கு எடுத்து க்கொள்ளப்படும் என்றேன்.
சில இடங்களில்...
செப்டம்பர் முதல் வாரம் காற்றாலை மின்சாரம் திடீரென்று 3000 மெகாவாட்டிலிருந்து ஜிரோவுக்கு வந்துவிட்டது. அன்றைய தினம் மற்றும் 10-ம் தேதி அன்றும் அரைமணி நேரம் தமிழகத்தில் சுழற்ச்சி முறையில் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. ஆகையால் அடுத்த நாள் நாங்கள் உடனடியாக அனல் மின் நிலையங்களை செயல்படுத்தியும் மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து உடனடியாக மின்சாரம் தர வேண்டும் என்று கேட்டு நடவடிக்கை எடுத்ததால் தமிழகத்தில் அடுத்த நாளிலிருந்து சகஜநிலை திரும்பிவிட்டது.
நிலக்கரி வர தாமதம்
நிலக்கரியை பொறுத்தவரை எப்பொழுதுமே தமிழ்நாடு அனல் மின் நிலையம் 15 நாட்களுக்கு வேண்டிய நிலக்கரியை வைத்திருப்போம். அந்த அடிப்படையில் தான் கடந்த 3 மாதகளாக 15 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பில் இருந்தது. கடந்த வாரத்தில் ஒடிசாவில் மழையிருந்த காரணத்தால் ஒரு வார காலம் அங்கேயிருந்து நிலக்கரியை கொண்டுவர வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அதனால் அந்த கையிருப்பு குறைந்து விட்டது. உடனடியாக நிலக்கரி நிறுவனங்களை தொடர்புகொண்டு நிலக்கரி வரத்தை உயர்த்த வேண்டுகோள் விடுத்து அதன்படி நிலக்கரியை அதிகமாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டதால் 3 நாட்கள் மேட்டூரிலும் வடசென்னையில் 3 நாட்களும் தூத்துக்குடியில் 6 நாட்களும் கையிருப்பு இருக்கின்றது.
மத்திய அமைச்சர் சம்மதம்
இன்றைய தினம் மத்திய இரயில்வே துறை அமைச்சரை சந்தித்து தினந்தோரும் கொடுக்கின்ற ரயில் ரேக்குகளை 16 ஆக உயர்த்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். நாங்கள் கையிருப்பை அதிகப்படுத்துவதற்காக இன்னும் 4 ரேக்குகளை சேர்த்து 20 ரேக்குகளாக கொடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறோம். ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் 16 ரேக்குகள் தருவதாக கூறியிருக்கிறார். சூழ்நிலை சரியானதும் அதிகரித்து கொடுப்பதாக கூறியிருக்கிறார்கள்.
தவறான பிரச்சாரம்
நேற்று காலையில் மின் நுகர்வின் அளவு குறைவாக இருந்ததன் காரணத்தினால் தூத்துக்குடியில் 210 மெகாவாட்டை உற்பத்தியை நாங்கள் குறைத்து இருக்கிறோம். நிலக்கரி இல்லையென்று குறைக்கவில்லை, வேண்டுமென்றால் நிருபர்களை அழைத்துச்சென்று கையிருப்பு நிலக்கரிகளை காட்டுகின்றேன். ஆனால் எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். மின்நுகர்வு குறைந்திருக்கின்ற காரணத்தினாலே தூத்துக்குடியில் 210 மெகாவாட்டையும் அதேபோல மேட்டூரில் 420 மெகாவாட் அளவையும் குறைத்திருக்கிறோம். கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைபெய்து கொண்டு இருக்கின்ற காரணத்தால் மின் தேவையும் குறைந்திருக்கின்றது.
மின்வெட்டு வராது
அதேபோல் இன்றைய தினத்திலிருந்து காற்றாலை மின்சாரமும் 2000 மெகாவாட் வந்திருக்கின்ற காரணத்தினால் அதிகமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை நாம் இருப்பு வைக்கமுடியாது. அதனால் அனல் மின் நிலையத்திலுள்ள மின்சார உற்பத்தியை குறைத்திருக்கிறோம். இது ஏதோ மக்கள் மத்தியில் தமிழகத்தில் மின்வெட்டு வந்துவிடும் என்பதுபோல ஒரு தவறான பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது என்று தெளிவாக சொல்வதற்கு கடமைபட்டிருக்கிறேன்.
பரிசீலிப்பதாக உறுதி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியதற்குப்பின் 2 நாட்களாக 8 ரேக்குகள் வந்து கொண்டிருந்தது. இப்பொழுது 13 ரேக்குகளாக உயர்த்தி கொடுத்திருக்கிறார்கள். நேற்றைய முன்தினம் கூட 17 ரேக்குகள் அனுப்பியிருக்கிறார்கள். இன்றைய தினத்திலிருந்து 16 ரேக்குகள் தினந்தோரும் அனுப்புவதாக கூறியிருக்கிறார்கள், நிலக்கரியின் கையிருப்பை அதிகபடுத்த வேண்டும் என்பதற்காக 20 ரேக்குகளை கேட்டிருக்கிறோம். முடிந்தவரை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதில் எந்த மாற்றமும் கிடையாது.
விரைவில் நடவடிக்கை
ஏதோ தமிழகத்தில் பெரிய மின்வெட்டு வருவதைப்போல ஒரு பீதியை கிளப்பி விட்டார்கள். எப்போது எல்லாம் குறைகின்றதோ அப்போதெல்லாம் மத்திய அரசை சந்தித்து நாங்கள் அதிகப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம். அவர்களும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இப்பொழுது இருப்பு குறைவாக இருப்பதால் நாங்கள் வெளிநாட்டிலிருந்து 30 லட்சம் டன் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி கொடுத்திருக்கின்றார்கள். டெண்டர் போட்டு இருக்கின்றோம் இப்போழுது தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு 6 லட்சம் டன் உடனடியாக ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்கின்றது. மீதி நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் மிகை மாநிலமாக...
பொதுவாக எந்த மாநிலத்தை எடுத்தாலும் அவர்களே முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்து அதை மின் மிகை மாநிலமாக ஆக்க முடியாது. மத்திய தொகுப்பிலிருந்து ஏன் வாங்குகிறீர்கள் என கேட்கலாம். மத்திய அரசு யாருக்கு கொடுக்கிறது மாநில அரசுக்குதானே கொடுக்கிறது. எல்லா மாநிலத்திற்கும் பிரித்து கொடுக்கிறார்கள். கூடங்குளம் மின்சாரம் நமக்கு 50 சதவீதமும் மற்ற மாநிலங்களுக்கு மீதியையும் பிரித்து கொடுக்கிறார்கள். அப்படி மத்திய தொகுப்பிலிருந்து வருவது, அதே போல தனியார் கொடுப்பது மத்திய அரசு அதை கேட்டு வாங்கி அதையெல்லாம் சேர்த்தால்தான் வருமே ஒழிய எந்த மாநிலத்திலுமே சொந்த உற்பத்தியை வைத்து மின் மிகை மாநிலமாக இருக்காது.
முழு உற்பத்தியை...
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலேயும் கிடையாது. எதிர் கட்சிகள் தவறான அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள். நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) கூட ராமதாஸ் சொல்லியிருக்கிறார். எப்போதுமே தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்தது இல்லை என்று சொல்லியிருக்கின்றார். நான் தெளிவாக சொல்லுகின்றேன் இந்திய சமன்பாட்டு அறிக்கையிலேயே தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள். தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருக்கிறது என்று. ஆனால் ஒரு மாநிலமே தேவையான அளவு முழு உற்பத்தியை செய்ய முடியாது. எல்லா மாநிலமுமே மத்திய தொகுப்பிலிருந்து வாங்குகின்றார்கள் அதைபோல தனியாரிடமும் வாங்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.
18,000 மெகாவாட்...
நமக்கு 15,000 மெகாவாட் இன்றைக்கு தேவை. நம்மிடம் 18,000 மெகாவாட் இருக்கின்றது. இதில் காற்றாலை, சூரிய மின்சக்தி கிடையாது. இதெல்லாம் இல்லாமல் 18,000 மெகாவாட் இருக்கின்றது. ஆக தமிழகம் எப்பொழுதுமே மின் மிகை மாநிலம் தான். இதை எத்தனை எதிர்கட்சிகள் தவறான பிரச்சாரத்தை செய்தாலும் இப்பொழுது பத்திரிக்கை நண்பர்கள் இருக்கின்றீர்கள், அவர்கள் சொல்கின்றார்கள், எதிர்கட்சிகள் சொல்கின்றார்கள், யாராவது உங்களுடைய நண்பர்களை, உங்கள் வீட்டிலேயேகூட கேட்டுப்பாருங்கள். ஏதாவது ஒரு நிமிடம் தமிழகத்தில் மின் வெட்டு இருந்திருக்கின்றதா என்று. சீர்காழியில் காற்று மழையினால் கிட்டத்தட்ட 238 மின் கம்பங்கள் வீழ்ந்து விட்டன. அதை சரிசெய்வதற்கு ஒரு நாள் ஆகலாம், உடனடியாக அதை தவறான பிரச்சாரம் செய்கின்றார்கள் மின்வெட்டு என்று.
அரசியலுக்காக அவதூறு...
இயற்கை சீற்றத்தில் மின்கம்பங்கள் விழுவது, டிரான்ஸ்பார்மர்கள் விழுவது என்பது சாதாரனமான ஒன்றுதான். அதை ஓரிரு நாட்களில் நாங்கள் சரி செய்கிறோம். வர்தா புயல் டிசம்பர்ல வந்தப்ப வந்த வேகத்திலே மின்சாரவாரியம் துரிதமாக செயல்பட்ட காரணத்தினால் மூன்று நாட்களிலேயே 100 சதவீத மின்சாரத்தை கொடுத்தோம். இதையே நீங்க அமெரிக்காவில் பார்த்தால் 10 நாட்கள் ஆகும். விசாகப்பட்டிணத்தில் 10 நாட்கள் ஆகும். ஆனால் மின்சார வாரியம் தொடர்ந்து அரசு வேகமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் கிடையாது. அதேபோலவே ஒக்கிபுயல் கடந்த வருடம் கன்னியாகுமரியில் வந்தது. கிட்டதட்ட 50 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்தன. அன்றே அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றிக்கு மின்சாரம் கொடுத்துவிட்டோம். மூன்று நகராட்சிகளுக்கு 2 நாட்களில் மின்சாரம் கொடுத்துவிட்டோம். அவ்வளவு வேகமாக உயிரை பணயம்வைத்து மின்சாரவாரிய தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். வேண்டுமென்றே அரசியலுக்காக அவதூறு சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
தி.மு.க ஆட்சியில் கூட...
எதிர்பாராதவிதமாக செப்டம்பர் முதல் வாரம் காற்றாலை மின்சாரம் முழுமையாக நின்று விட்டது. அதனால் தான் அந்த 2 நாட்கள் பிரச்னையும் வந்தது. நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளது என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் என்பது சரியில்லை. மகாராஷ்ட்ரா, குஜராத், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களிளும் நிலக்கரி கையிருப்பு மிகவும் குறைவாகத்தான் உள்ளது. அங்கெல்லாம் நிலக்கரியை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்யவில்லை. தமிழ்நாட்டில்தான் நிலக்கரியை வைத்து அரசியல் செய்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் கூட நிலக்கரி ஒரு நாள் மட்டுமே இருப்பு இருந்ததை மறந்து விட முடியாது. அரசியல் செய்வதற்கு வேறு காரணங்கள் இல்லாததால் இதை வைத்து கொண்டு மக்கள் மத்தியில் தேவையில்லாத பீதி கிளப்புகிறார்கள்.
நாங்கள் திரும்ப திரும்ப சொல்கிறோம் தமிழகம் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் மின்சாரத்தை எடுத்து செல்லும் மின் தொடரமைப்பு வசதி குறைவு என்பது தவறானது. தமிழக அரசு 5000 மெ.வாட் அளவிற்க்கு மின் தொடரமைப்பு வசதியை செய்துள்ளது. இதுவே தி.மு.க. ஆட்சியில் இந்த அளவிற்கு செய்யவில்லை. நாங்கள் அதிக அளவில் மின் கட்டமைப்பு வசதியை அதிகபடுத்தியுள்ளோம்.
உற்பத்தி குறைக்கப்படும்...
இன்று மின் நுகர்வு குறைந்துள்ளதால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உற்பத்தியை குறைத்து உள்ளோம். ஆனால் ஊடகங்கள் நிலக்கரி இல்லாததால் மின் உற்பத்தி நிறுத்தம் என்கிறார்கள். காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் போது அனல் மின் உற்பத்தி குறைக்கப்படும். அப்போது தவறான பிரசசாரத்தை செய்கிறார்கள். காற்றாலை மின்சாரத்தை நாங்கள் முழுவதுமாக பயன்படுத்துகிறோம் இல்லையென்றால் அவர்கள் உயர் நீதிமன்றத்திற்கு சென்று ஆணை பெறுவார்கள். காற்றாலை மின் உற்பத்தி குறையும் போது அனல் மின் உற்பத்தியை துவக்க சுமார் 12 மணி நேரம் ஆகும். அதனால் தான் 9 மற்றும் 10ம் தேதிகளில் மின் பிரச்னை ஏற்பட்டது. இவ்வாறு கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.