முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி - பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து கடிதம்

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோருக்கு மலர் கொத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைத்தார்.

ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ள வாழ்த்து கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

தீபாவளி திருநாளையொட்டி உங்களுக்கும், துணைவியாருக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகிழ்ச்சிகரமான நன்னாளில், தீபாவளித் திருநாளில் உங்கள் வாழ்வில் அமைதி பொங்கட்டும். சுபீட்சம் மலரட்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

பிரதமருக்கு வாழ்த்து

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி பண்டிகையையொட்டி முன்னிட்டு பிரதமர் மோடிக்கு மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைத்தார். அந்தக் கடிதத்தின் விவரம் பின்வருமாறு:-

தீபாவளி திருநாளையொட்டி எதிர்வரும் ஆண்டு மிகச் சிறந்த ஆண்டாக மலர என் இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீப ஒளி விளக்கு பண்டிகை இந்திய மக்கள் அனைவரின் வாழ்க்கையில் அமைதி நிலவட்டும், சுபீட்சம் தழைக்கச் செய்யட்டும். இவ்வாறு அந்த செய்தியில் கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் முதல்வர் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். வாழ்த்துக் கடிதம் அனுப்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் தனது நன்றியினை தெரிவித்ததோடு, தனது தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து