முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமராவதி அணையில் இருந்து வரும் 12-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, அமராவதி அணையில் இருந்து பாசன நீட்டிப்புக்காக வரும் 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தகுந்த இடைவெளி விட்டு தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து அமராவதி பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து பாசன நீட்டிப்பு வழங்குமாறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த  நீரினைப் பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி  மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த  நீரினைப் பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி  மக்களின் வேண்டுகோளினை ஏற்று, அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள அமராவதி பழைய 10 கால்வாய்ப் பாசனப்பகுதிகளுக்கு 2570 மி.க.அடிக்கு மிகாமலும் மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி  புதிய பாசனப் பகுதிகளுக்கு 1330 மி.க. அடிக்கு மிகாமலும்,  ஆக மொத்தம் 3900 மி.க.அடிக்கு மிகாமல்,  பாசன நீட்டிப்பாக 12.12.2018 முதல் 31.1.2019 முடிய தகுந்த இடைவெளி விட்டு தண்ணீர் திறந்து விட  நான் ஆணையிட்டுள்ளேன்.

47,117 ஏக்கர் நிலங்கள்...

இதனால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து