முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளத்தில் பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவு தினம் அனுசரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 பெப்ரவரி 2019      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மாவட்ட அதிமுக சார்பில்  பேரறிஞர் அண்ணா அவர்களின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய திருவுருவச்சிலைக்கு  அதிமுக மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மதுரை ஆவின் பெருந்தலைவர் ஓ.ராஜா, பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், மாவட்ட பிரதிநிதி அன்பு, தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சந்தோஷம், கூட்டுறவு சங்க தலைவர்கள் முத்து, வைத்தியநாதபுரம் ராஜாமுத்து,   மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் கள்ளிப்பட்டி சிவக்குமார், நகர சார்பு அணி செயலாளர்கள் எம்.ஜி.ஆர் மன்றம் ராஜவேல், அம்மா பேரவை காஜாமுயுனுதீன், பாசறை பாஸ்கரன், அம்மா பேரவை தலைவர் முத்துக்குமார் மற்றும் பூக்கடை கண்ணன் மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து