எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக பட்ஜெட்டை உதவாக்கரை பட்ஜெட் என்று விமர்சித்த மு.க.ஸ்டாலினுக்கு சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செம்மலை கடும் கண்டனம் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செம்மலை பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பொங்கல் பரிசாக தமிழக மக்களுக்கு ஆயிரம் ருபாய் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிக்ஸர் அடித்திருக்கிறார். அடுத்து இப்போது 60 லட்சம் ஏழைத்தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 கொடுத்து மேலும் ஒரு சிக்ஸர் அடித்திருக்கிறார். அடுத்து ஒரு ஹாட்ரிக் அடிக்க போகிறார். அதைத்தொடர்ந்து சிக்ஸராக அடித்து கொண்டே இருப்பார்.
பிளாஸ்டிக் தடை
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இலட்சிய கனவு, அந்த கனவை நிறைவேற்ற அவர் அரும்பாடுபட்டார். அந்த கனவை நிறைவேற்ற பிரதமரை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடிபழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தினார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமரை அடிக்கல் நாட்ட வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரிய சாதனையை நிறைவேற்றியுள்ளார். பிளாஸ்டிக் தடைச் சட்டம் யாராலும் நினைத்து பார்க்க முடியாத திட்டமாகும். உலக நாடுகளே யோசித்துக் கொண்டிருக்கிற பிளாஸ்டிக் தடை திட்டத்தை ஒரே கையெழுத்தில் நிறைவேற்றியிருக்கிறார்.
நிருபித்துவிட்டார்கள்...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் யாருமே கேட்காமல் குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தார். வன்னியர் அறக்கட்டளை பொதுச்சொத்து சட்டத்தை நிறைவேற்றி சாதனை படைத்திருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சாதாரணமானவர்கள், சாமான்யமானவர்கள் என்று எதிர்க்கட்சிகள் நினைத்திருக்கக்கூடும். அவர்கள் சாதாரணமானவர்கள் சாமான்யர்கள் அல்ல சாதனையாளர்கள் என்பதை ஓ.பி.எஸ்.-ம், இ.பி.எஸ்-ம் நிருபித்துவிட்டார்கள்.
கரைபுரண்டு ஓடும்...
காவிரிஆற்றில் மேகத்தாது அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிராக போராடும் முதல்வர், எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு 200 டி.எம்.சி. கொண்டு வருவதற்காக காவிரி – கோதாவரி இணைப்பு திட்டத்திற்காக மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார். நிச்சயம் இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வருவார். சிலப்பதிகாரத்தில் காவிரியை நடந்தாய் வாழி காவிரி என்று சொல்லப்பட்டிருக்கிறது. காவிரி- கோதாவரி திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் காவிரியில் நீர் அப்போது கரைபுரண்டு ஓடும்.
தேவையில்லாத...
இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை அழகான பட்ஜெட். இது குறித்து தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்தபோது முதல்வரையும், துணை முதல்வரையும் பாராட்டினார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், உதவாக்கரை பட்ஜெட் என்று கூறியிருக்கிறார். அத்திக்கடவு, அவினாசி திட்டம் உதவாத திட்டமா? ஆழ்கடலில் மீன்பிடிக்க நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வழங்கும் திட்டம் தேவையில்லாத திட்டமா? கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தை எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டாம் என்கிறாரா ? அதில் ஒருவர் காதில் பூ சுற்றும் பட்ஜெட் என்று கூறியிருக்கிறார்.
உகந்ததல்ல...
மற்றவர்கள் காதில் பூச்சுற்றியே பழக்கப்பட்டவர் அவர், ஆனால் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லலாமா ? எவ்வளவு முயற்சி செய்து தொழிலதிபர்களையெல்லாம் அழைத்து வந்திருக்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை மாயமான் காட்சி என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் 3லட்சத்து 431 கோடி முதலீட்டை பெற்று 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை வரவேற்கவேண்டும். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது எதிர்க்கட்சித்தலைவருக்கு உகந்ததல்ல. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாயம்: கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு
27 Apr 2024சென்னை, கோவை பாராளுமன்ற மக்களவை தொகுதியில் பெயர் நீக்கிய வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்