முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல்லட் ரயிலை காட்டிலும் புல்லட் துளைக்காத ஆடைதான் வீரர்களுக்கு அவசியம்: அகிலேஷ்

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : இந்த தேசத்துக்கு புல்லட் ரயிலைக் காட்டிலும், எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு புல்லட் துளைக்காத ஆடைகள்தான் அவசியம் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

புல்வாமாவில் நடந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு உளவுத்துறை உரிய நேரத்தில் தகவல் அளிக்காமல் தோல்வி அடைந்ததே காரணம். இதற்கு மத்தியஅரசு என்ன விளக்கம் அளிக்கப் போகிறது. உளவுத்துறையின் தகவல்களை ஒருங்கிணைக்க அரசால் ஏன் முடியவில்லை? இப்போதுள்ள நிலையில் நம்முடைய தேசத்துக்கு, புல்லட் ரயில் தேவையில்லை. எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களை புல்லட்களில் இருந்து காக்கும் ஆடைதான் அவசியம். பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட மக்களும், அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து