முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகோவின் ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை ஐகோர்ட்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சேத்துரோக வழக்கில் வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறைத்தண்டனையை சென்னை ஐகோர்ட் நிறுத்தி வைத்தது.  

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசும் போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் வைகோ மேல்முறையீடு செய்தார்.

அவரது மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை பரிசீலனை செய்த ஐகோர்ட், வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. வைகோ தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடியும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.  மேலும், இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்காத வகையில் சிந்தித்து பேச வேண்டும் என வைகோவுக்கு அறிவுரை வழங்கிய நீதிமன்றம், இந்த மேல்முறையீட்டு வழக்கில் ஆயிரம் விளக்கு காவல்துறை ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து