முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலி: உத்தரகாண்ட் முதல்வர் இரங்கல்

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

உத்தரகாசி : உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் 3 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாசி மாவட்டம் மோரி பகுதியில் இருந்து நேற்று காலை மோல்டி பகுதிக்கு ஹெலிகாப்டரில் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அந்த ஹெலிகாப்டர் மோல்டியை நெருங்கிய போது மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த ஹெலிகாப்டரில் பைலட், துணை பைலட் மற்றும் ஒருவர் பயணம் செய்துள்ளனர். அவர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், 3 பேரின் குடும்பங்களுக்கும் தலா 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்..

மோரி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த அடைமழையின் போது, மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலரைக் காணவில்லை. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து