முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்கவுன்ட்டர் செய்த போலீசாருக்கு மலர் தூவி வாழ்த்திய பொதுமக்கள்: வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

தெலுங்கானா என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் திரண்ட பொதுமக்கள் அங்கிருந்த போலீசார் மீது மலர் தூவி வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே கால்நடை பெண் மருத்துவரை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்தக் கொடூரக் கொலையில் லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்திலேயே குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.  இதற்கு நாடு முழுவதும் பரவலாக வரவேற்பும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது.

சம்பவ இடத்தில் திரண்ட அம்மாநில மக்கள் அங்கிருந்த போலீசார் மீது பாலத்தின் மேல் இருந்தவாறே ரோஜா மலர்களைத் தூவி வாழ்த்தி போலீசாரை வாழ்த்தி கோஷமிட்டனர். ஒரு சிலர் பட்டாசுகளை வெடித்து போலீசாருக்கு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பெண் மருத்துவரின் அண்டை வீட்டார் சிலர் திரண்டு வந்து போலீசாருக்கு இனிப்புகளை வழங்கினர். சிலர் போலீசாரை தங்களின் தோள்களின் மீது தூக்கி ஆரவாரம் செய்தனர். தெலுங்கானா முழுவதுமே மக்கள் ஒரேமாதிரியான மகிழ்ச்சி மனநிலையை வெளிப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து