எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனாவை தடுக்க ஒரே வழி தனிமைப்படுத்தி கொள்வதுதான் என்றும் இந்த விஷயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த தேவையில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 11 குழுக்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கொரோனா தொற்று நோய் உலக அளவில் 199 நாடுகளில் பரவி உள்ளது. இந்த நோய்க்கு உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பேர் பலியாகி இருக்கிறார்கள்.இந்தியாவை பொறுத்தவரை கொரோனா நோய்க்கு 27 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒருவர் பலியாகி இருக்கிறார். தமிழ்நாட்டில் ஏற்கனவே 50 பேர் கொரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது மேலும் 17 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது ஈரோடு மாவட்டத்தில் 10 பேருக்கும், சென்னையில் 4 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், திருவாரூரில் ஒருவருக்கும் என 17 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 67 பேருக்கு கொரோனா தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. அவர்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
17,869 படுக்கைகள்
தமிழகத்தில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்க 17 ஆயிரத்து 869 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1989 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 420 பேருக்கு 25 நாள் கண்காணிப்பு முடிந்துள்ளது. கொரோனா நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை என்னுடைய தலைமையில் 8 முறை ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு முறையும் தலைமைச் செயலாளர், துறை அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி. உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. தலைமைச் செயலாளர் தலைமையில் டாஸ்க் போர்ஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் தலைமைச் செயலாளர் தலைமையில் 4 முறை நடைபெற்றிருக்கிறது. நானும் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு நடத்தினேன். ஒன்றரை கோடி முக கவசங்கள் வாங்க அரசு ஆர்டர் செய்துள்ளது. அதேபோன்று என்95 என்னும் முகக் கவசங்கள் 25 லட்சம் வாங்கவும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவேண்டி உள்ளது. நோய் தடுப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
வெளியூர் செல்ல யாருக்கு அனுமதி?
ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசரமாக சிலர் வெளிமாவட்டங்களுக்கு செல்ல விரும்புகிறார்கள். எனவே திருமண நிகழ்ச்சி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிக்கு மட்டும் வெளியூர் செல்ல அனுமதி அளிக்கப்படும். இந்த அனுமதியை எப்படி வழங்க வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்தந்த வட்டாட்சியர்களே அனுமதி வழங்கலாம் என்று தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் எப்படி வருகிறது? எப்படி பரவுகிறது. அதன் ஆபத்து என்ன என்பது பற்றி மக்களிடம் தொடர்ந்து எடுத்து கூறி வருகிறோம். துண்டு பிரசுரங்கள் அச்சடித்தும் தருகிறோம். ஊடகங்கள், பத்திரிக்கைகள் மூலமும் எடுத்து சொல்லி வருகிறோம். பத்திரிகையாளர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கொரோனா நோய் தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்வது தான். கொரோனா பரவலில் தமிழகம் 2-வது கட்டத்தில் இருந்து 3-வது கட்டத்திற்கு செல்லாமல் தடுப்பதில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது. பாமர மக்களுக்கு இந்த நோயின் ஆபத்து குறித்து மேலும் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
எத்தனை சட்டம் போட்டாலும் மக்களின் ஒத்துழைப்பு என்பது தான் முக்கியம். மக்களை தண்டிப்பதற்காக சட்டம் அல்ல. ஆனால் அந்த சட்டத்தை மக்கள் மதித்து நடக்க வேண்டும். இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. வரலாற்றில் இதுபோன்று நாம் சந்திக்கவே இல்லை. இது ஒரு சவாலான நேரம். படிப்படியாக கொரோனா பாதிப்பை தடுக்க வேண்டும். மற்ற மாநிலங்களை விட தமிழக மக்கள் ஒத்துழைப்பு மிக நன்றாக உள்ளது.
ரூ.1000 எப்போது?
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பொது வினியோக திட்டத்தின் கீழ் எப்படி பொருட்களை விநியோகிப்பது? ரூ.1000 எப்படி வழங்குவது என்று ஆலோசனை நடத்துகிறார்கள். எனவே இதில் தெளிவான முடிவு எடுத்து அறிவிக்கப்படும். நகரம் முதல் கிராம் வரை கொரோனா தொற்று நோய் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முழு வீச்சில் எடுக்கப்பட்டு வருகிறது. கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து காய்கறி, பழங்கள் ஏற்றி வரும் வாகனங்களில் கிருமி நாசினி அடிக்கப்படுகிறது. டிரைவர்களுக்கும் சானிடைசர் கொடுக்கப்பட்டு பரிசோதனையும் செய்யப்படுகிறது.
அனைத்து கட்சி கூட்டம் தேவை இல்லை
கொரோனா தொற்று நோயை தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இது மருத்துவ துறை சம்பந்தப்பட்டது. அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதால் அனைத்து கட்சி கூட்டம் நடத்த தேவை இல்லை. வெளிமாநிலங்களில் இருந்து இங்கு பணிபுரிய வந்த தொழிலாளர்களுக்கு தேவையான இருப்பிடம், உணவு அனைத்தும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளிகளாக பணி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் தங்க இருப்பிடம், உணவு அனைத்தும் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம். எதற்கு எவ்வளவு பணம் செலவு செய்யப்படுகிறதோ அதனை அரசு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காதால், கொரோனாவுக்கு தற்போது இருப்பது ஒரே தடுப்பு மருந்து மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது தான். வீட்டு வாடகைதாரர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு விவகாரத்தில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.