முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நார்வே நாட்டில் கொரோனா விதிகளை பின்பற்றாத பிரதமருக்கு அபராதம் விதிப்பு

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில், கொரோனா விதிகளை மதிக்கத்தவறிய அந்நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க்-க்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். 

நார்வே நாட்டில் இருமுறை பிரதமராக பதவி வகித்துள்ள எர்னா சொல்பேர்க் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடினார். நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், 10- க்கும் மேற்பட்டோர் விழாக்களில் பங்கேற்க அனுமதி இல்லைஎன்று நார்வே அரசு அறிவித்தது. 

ஆனால் இந்த கட்டுப்பாடுகளை மீறி தனது குடும்ப உறுப்பினர்கள் 13-க்கும் மேற்பட்டோருடன் பிறந்த நாளைக் கொண்டாடியதால் பிரதமருக்கு 20 ஆயிரம் நார்வே கிரவுன்ஸ் தொகையை அபராதமாக போலீசார் விதித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து