முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிசோரமில் ஆன்லைன் கல்வி பெற தினமும் 3 கி.மீ. நடக்கும் மாணவர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புக்ஜிங் : மிசோரம் மாணவர்கள் ஆன்லைன் கல்விக்கு இணையதள வசதி பெறுவதற்காக தினமும் 3 கி.மீ. நடந்து செல்லும் அவலநிலை உள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு ஆகியவற்றால் ஆன்லைன் வழியேயான வகுப்புகள் நடத்த ஊக்குவிக்கப்படுகின்றன.  மிசோரமில் புக்ஜிங் வேங்தர் கிராமத்தில் வசித்து வரும் மாணவ, மாணவியர் ஆன்லைன் கல்வி பெறுவதற்கு தேவையான இணையதள வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்காக அவர்கள் நாள்தோறும் 3 கி.மீ.க்கு மேல் நடந்து பக்கத்து கிராமத்திற்கு சென்று சேர்கின்றனர்.  அதன்பின் அங்கிருந்து கிடைக்கும் இணையதள வசதியை பயன்படுத்தும் சூழல் காணப்படுகிறது. இதனால், தேர்வுக்கு தயாராவதில் கடினம் ஏற்பட்டு உள்ளது என மாணவர்கள் கூறுகின்றனர். 

இந்த மாத தொடக்கத்தில் மிசோரமில் உள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த 7 இளநிலை கல்லூரி மாணவர்கள் இணையதள வசதியின்மையால், செமஸ்டர் தேர்வுகளை மலை உச்சிக்கு சென்று எழுதியுள்ளனர். இதற்காக மூங்கில், வாழைமர இலைகள் ஆகியவற்றை கொண்டு குடிசை ஒன்றை எழுப்பி தேர்வு மையம் போல் உருவாக்கி வைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து