முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிராவிட் மட்டுமே விண்ணப்பம்: கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவிக்கு| விண்ணப்பிக்க ' காலக்கெடு நீட்டிப்பு '

வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை: தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பித்துள்ள நிலையில், வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை. எனவே விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை பி.சி.சி.ஐ நீட்டித்துள்ளது.

2000-ம் ஆண்டில்...

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி  கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.  இளம் கிரிக்கெட் வீரர்களை  உருவாக்கும் விதமாக கடந்த 2000-ம் ஆண்டு இந்த அகாடமி உருவாக்கப்பட்டது. இந்த  அகாடமியின் தற்போதைய தலைவராக ராகுல் டிராவிட் உள்ளார்.

ராகுல் விண்ணப்பம்...

இவரின் பதவிக்காலம் தற்போது முடியவுள்ள நிலையில் அப்பதவிக்கு விண்ணப்பிக்க பி.சி.சி.ஐ அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தற்போது வரை ராகுல் டிராவிட் மட்டுமே விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை பி.சி.சி.ஐ நீட்டித்துள்ளது.

சிறந்த வேலைகள்... 

இது தொடர்பாக பி.டி.ஐ ஊடகத்துக்கு பேட்டியளித்த பி.சி.சி.ஐ நிர்வாகி ஒருவர், “ தலைவர் பதவிக்கு  ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பித்துள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் முன்னேற்றத்திற்காக ராகுல் டிராவிட் பல மகத்தான வேலைகளை செய்துள்ளார்.  எனவே, அவர் மீண்டும் பணியில் தொடர்வார் என்பதை யூகிக்க பெரிய மேதையாக இருக்க தேவையில்லை”  என்று கூறியுள்ளார்.

காலக்கெடு நீட்டிப்பு...

தற்போது வரை இந்த பதவிக்கு வேறு எந்த முக்கிய நபர்களும் விண்ணப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளனர்.  இதனிடையே, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க காலக்கெடுவை மேலும் சில நாட்கள் பி.சி.சி.ஐ நீட்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து