முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 நோயாளிகள் பலி

சனிக்கிழமை, 6 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது இதில் 11 நோயாளிகள் பலியானார்கள். 12 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியானார்கள்  12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவசர சிகிச்சை பிரிவில் குறைந்தபட்சம் 20 நோயாளிகள் சிகிச்சை பெற்று வநதுள்ளனர்.இவர்கள் அனைவரும் கொரோனா பாதிப்பு நோயாளிகள் என கூறப்படுகிறது.

நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. அருகில் உள்ள மற்ற வார்டுகளுக்கும் பரவிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து நோயாளிகளை வெளியேற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.

உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து