முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமுடக்கம் எதிரொலி: தமிழகத்தில் கேரள எல்லைகள் அடைப்பு: திருப்பி அனுப்பப்பட்ட கர்நாடக பஸ்கள்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் பொதுமுடக்கம் எதிரொலியாக தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு செல்லும் குமுளி, கம்பம்மெட்டு மலைச்சாலைகள் அடைக்கப்பட்டன. மேலும்,  ஓசூர் நோக்கி வந்த கர்நாடக பஸ்கள் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.

ஒமைக்ரான், கொரோனா தொற்று காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை  தமிழகத்தில்  அதிகரித்து வரும் நிலையில்,  தமிழக அரசு இரவு ஊரடங்கை அமல்படுத்தியது. இதன்படி, கடந்த 6-ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு எனவும் அரசு அறிவித்தது. இதன்படி நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் இன்று காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருந்தது.

தேனி மாவட்டத்திலிருந்து நேற்று கேரளத்துக்கு செல்லும் மலைச்சாலைகளான குமுளி, கம்பம்மெட்டு பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடியில் தடை அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது, மேலும் காய்கனி, பால் போன்ற அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.

இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூர் நோக்கி வந்த கர்நாடக அரசு பேருந்துகளை, தமிழக மாநில எல்லையான ஒசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகள்  கர்நாடகாவிற்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இதில் பயணம் செய்த குறைந்த அளவிலான பயணிகள், நடந்தே ஓசூர் நோக்கி வந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து