முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக பள்ளிகளில் யோகா பயற்சி வகுப்புகளை நடத்த நடவடிக்கை : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      தமிழகம்
Anbil-Mahes 2022 06 07

Source: provided

சென்னை : தமிழக பள்ளிகளில் யோகா பயற்சி வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

உலக யோகா தினத்தை முன்னிட்டு சென்னை பூந்தமல்லி அடுத்த வெல்லப்பன் சாவடியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் யோகா உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. அதில் 415 மாணவர்கள் இணைந்து கடிதமான சமக்கோன்னா ஆசனத்தில் 1 மணி நேரத்துக்கு மேலாக அமைந்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை உயர்நிதிமன்ற உயர்நிதிபதி சுரேஷ் குமார் சிறப்பு விருந்துனராக பங்கேற்றனர். நிர்ணயித்த இலக்கை விட கூடுதலாக 27 நிமிடம் யோகா செய்த மாணவர்கள் கோல்ட் புக் ஆப் ரெகார்ட் உலக சாதனையில் இடம் பெற்றனர்.

இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு உலக சாதனைக்கான சான்றுதல்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழக பள்ளிகளில் யோகா பயற்சி வகுப்புகள் கொண்டுவருவது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து