முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதி திராவிட நலத்துறை அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் : அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 29 ஜூன் 2022      தமிழகம்
Kayalvi-i 2022 06 29

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அவற்றின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.  

 2018-2019-ஆம் நிதியாண்டு முதல் 2022-2023-ஆம் நிதியாண்டு வரை வெளியிடப்பட்ட ஆளுநர் உரை, வரவு செலவுத் திட்ட உரைகளில் இடம்பெற்ற அறிவிப்புகள், முதல்வரால் சட்டமன்றப் பேரவை விதி எண்.110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட  பல்வேறு அறிவிப்புகளை செயலாக்கம் செய்வது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந்த அறிவிப்புகளை மாணாக்கர் மற்றும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டு வரவும், மேலும்,  இத்திட்டங்களின் பயன் அவர்களை விரைந்து சென்றிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலாளர் மணிவாசன், ஆதிதிராவிடர் நல ஆணையர் மதுமதி, பழங்குடியினர் நல  இயக்குநர் அண்ணாதுரை, தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் செயலாளர் பழனிசாமி  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து