முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டான்சானியாவில் ஏரியில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம் : 20 பேர் மீட்பு; பலர் மாயம்

ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2022      உலகம்
Tanzania 2022-11-06

Source: provided

டான்சானியா : ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் பயணிகள் விமானம் ஒன்று விக்டோரியா ஏரியில் நொறுங்கி விழுந்தது. விமானத்தில் 49 பேர் பயணித்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான செய்தி அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினர், உள்ளூர் மக்கள், மீனவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். விமான விபத்து தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அது முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கியது உறுதியானது. புக்கோபா விமான நிலையத்தின் ரன் வேயின் ஒரு பகுதி விக்டோரியா ஏரியை ஒட்டி அமைந்துள்ளது.

இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானம் புக்கோபாவில் இருந்து டான்சானியாவின் பெரிய நகரமான தஸ் எஸ் சலாமிற்கு கிளம்பியது. ஆனால் புயல், மழைக்கு இடையே விமானம் நொறுங்கி விழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து